கோழிப்பண்ணை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
கோவை, ஜூன் 24- சுல்தான்பேட்டை ராஜீவ் நகரில் கோழிப்பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரி டம் விவசாயிகள் திங்களன்று மனு அளித்தனர். கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை ஒன்றியம், வடவள்ளி ஊராட் சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் பகுதி யையொட்டிய நிலத்தில் ஒருவர், கோழிப் பண்ணை அமைப்பதாகவும், அதற்கு அனுமதிக்ககூடாது என ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த அம் மனுவில், ராஜீவ் நகர் பகுதியில் விவசா யம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் களில் ஈடுபட்டு வரும் மக்கள், உழவர் சந்தையில் விளைபொருட்களை விற் பனை செய்து வருகின்றனர். இப்பகுதி யில் சுமார் 250 மாடுகளும், 200 ஆடுக ளும் வளர்க்கப்பட்டு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அரு கில் கோழிப்பண்ணை அமைக்கப்பட் டால், அதன் கழிவுகளால் ஏற்படும் துர் நாற்றம் காரணமாக குடியிருப்பு பகுதி யில் வாழ முடியாத நிலை உருவாகும். மேலும், கோழிப்பண்ணையால் விவ சாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், ஈக்கள் தொல்லையால் கால்நடைக ளுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாய மும், சுகாதாரக் கேட்டையும் ஏற்படுத் தும். எனவே, கோழிப்பண்ணை அமைப் பதை உடனடியாக தடுத்து, அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ் வாறு அம்மனுவில் தெரிவித்தனர். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகாக்குழு உறுப்பினர் என்.ரங்கநா தன், விவசாயத் தொழிலாளர் சங்க சுல்தான்பேட்டை ஒன்றியப் பொருளா ளர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.