போலி சித்திரம்... போலி குறள்... திருவள்ளுவரை அவமதிக்கும் ஆளுநர் ப.சிதம்பரம் கண்டனம்
சென்னை, ஜூலை 16- கடந்த 13ஆம் தேதி மருத்துவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்ட 50 மருத்துவர் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப் பரிசு வழங்கினார். இந்த விருது கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் ஆர்வலர்கள் ஆய்வு செய்த போது, திருக்குறளில் அப்படி ஒரு குறளே இல்லை என்பது தெரியவந்தது. ஆளுநர் மாளிகை தரப்பில் அச்சிட்ட குறள் ஒரு போலியான திருக்குறள் என்பது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. ஆளுநர் மாளிகை அச்சிட்ட திருக்குறள்: “செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு”. (திருக்குறள் 944) உண்மையான திருக்குறள் 944: “அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து”. இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான தால், ஆளுநர் மாளிகை நிர்வாகம் 50 மருத்து வர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, திருக்குறள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த விவ காரத்தை கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதி விட்டுள்ளதாவது: “ஜூலை 13 அன்று ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலைத் தமிழ்நாடு முதல்அமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் திருவள்ளு வரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது. ‘குறள் 944’ என்று பொறிக்கப்பட்ட ‘குறள்’ திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை. குறள் 123இலிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல். காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவ மதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக் குறள்.... இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?” இந்த சம்பவம் தமிழ் மற்றும் திருக்குறள் ஆர்வலர்களிடையே பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.