கள்ளக்குறிச்சி, செப்.11 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந் தூர்பேட்டையில் சமூக விரோதக் கும்பல் 17 வயது சிறுமி மற்றும் இளம் பெண்களை பாலியல் வணிகத்தில் ஈடு படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வழக்கில் குழந்தைகள் மற்றும் பழங்குடி இருளர் சமூகத்தைச் சார்ந்த பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குழந்தைகளை பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய குற்றம் நடந்திருந்தும், போக்சோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இருளர் பழங்குடி பெண்களை பாலியல் வணி கத்தில் ஈடுபடுத்தி இருந்தும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப் படாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் சார்பில் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், உளுந்தூர் பேட்டை சின்னசாமி தெருவுக்குச் சென்றனர். அப்போது, அங்கு ஒரு கும்பல் வாடகைக்கு வீடு எடுத்து சிறுமி களை அடைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உளுந்தூர் பேட்டை காவல் நிலைய ஆய்வாளரை சந்தித்தனர். அப்போது அவர், “இந்தப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்திருக் கிறோம். கோவில் திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமியிடம் விசாரித்தோம். அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு வரின் உறவினர் என்பது தெரிய வந்தது. இதனால் அவரை வழக்கில் சேர்க்க வில்லை” என்று காவல் ஆய்வாளர் கூறி யுள்ளார். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரஜத்சதுர்வேதியை சந்தித்த போது, “வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் குற்றம் செய்த 16 நபர்களை கைது செய்துள்ளோம். இந்த கும்ப லுக்கு மாநிலம் முழுவதும் தொடர்பு உள்ளதால் விசாரணை நடத்தி வரு கிறோம். பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து 17 இளம்பெண்களை மீட்டு முகாமில் தங்க வைத்திருக்கிறோம்” என தெரிவித்திருக்கிறார். பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத்-ஐ உண்மை அறியும் குழு சந்தித்தது. அப்போது, இம்மாவட்டத்தில் பாலியல் தொடர் பாக பாதிக்கப்படும் பெண்களுக்கு மறு வாழ்வு அளிக்க மாநில அரசின் அனு மதி பெற்ற தன்னார்வலர் குழு ஏதேனும் உள்ளதா? என கேட்டதற்கு, “இதுவரைக் கும் அப்படியில்லை. இனி அது போன்ற குழு அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும்” என்றார். பாலியல் கும்ப லால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் மறுவாழ்வுக்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் நிதி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர், நிதி உதவிக்கு தேவையான நடவடிக்கையை உடனே எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மாதர் சங்கம் அமைத்துள்ள உண்மை அறியும் குழுவில், முனைவர் வழக்கறிஞர் ப.நிர்மலா ராணி (தலை வர், மகளிர் சட்ட உதவி மன்றம், தமிழ் நாடு), வழக்குரைஞர் எஸ்.செல்வி கோமதி (இணை இயக்குனர், சோகோ அறக்கட்டளை, மதுரை), எஸ்.டி. சங்கரி (மாநிலத் துணைத் தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), எம்.கஸ்தூரி (மாவட்ட துணைச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம்), ஜெ.சசிகுமார், செய்தியா ளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.