மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அன்று மட்டும் மொத்தம் 7 முறை நில நடுக்கம் பதிவானது. இதில் நிலநடுக்கத்தால் மியான் மர் நாட்டின் மண்டலாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மண்டலாய் பகுதியின் 35 சத விகிதம் இடங்கள் இடிந்து தரை மட்டக்கியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு 5.1 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், மியான்மரில் ஞாயிறன்று முற்பகல் 3-ஆவது நாளாக மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. ஆனால் சேத விபரங்கள் தொடர்பாக ஞாயிறன்று மாலை 6 மணி வரை உறுதியான எந்த தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.