போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் (Cartel) வன்முறைக்கு எதிரான போராட்டத்தை, அக்கும்பலைச் சேர்ந்தவனே தலைமை தாங்கி நடத்த முடியுமென்கிறது, 2024 இல் வெளிவந்த எமிலியா பெரெஸ் (Emilia Perez) என்ற பிரான்சு இசைப் படம். இசைப் படம் என்றாலே முதலில் மனதில் நிழலாடுவது “சவுண்ட் ஆப் மியூசிக்”.அந்த வரிசையில் வந்துள்ளது இப்படம்.இயல்பான கதையோட்டத்தில் கதை மாந்த ரின் ஆழ்மன உணர்வுகள் நடனம்,பாடல் வழியே மிகை மெய்மையாக வெளிப்படும்.பின்னர் இயல்பான கதைப்போக்கில் செல்லும்.இதுவே சர்ரியலிச (மீமெய்மை)வகைமை எனப்படும்.இசைப்படமும் இதற்குள் அடங்கும். போதைப்பொருள் கடத்தல் தலை வன் மெனிடாஸ். இத்தொழிலில் நிலவும் போட்டி, பொறாமை, சூது, சூழ்ச்சி ஆகிய வற்றிலிருந்து விடுபட்டு அமைதியான புதிய தொரு வாழ்வை வாழ விரும்புகிறான். சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருள் தொழிலைக் கைவிட்டு சமூ கத்திற்கு நன்மை செய்து அமைதி காணத் தீர்மானிக்கிறான். முதலில் தன்னைப் பெண்ணாக பால் மாற முடிவு செய்கிறான்.ரீட்டா என்ற பெண் வழக்கறிஞர் மூலம் பால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்கிறான்.இதற்கேற்ப சட்ட ரீதியான ஆவணங்களையும் ரீட்டா உதவியுடன் உருவாக்கிக் கொள்கிறான்.அனைத்தும் ரகசியமாக நடந்தேறுகின்றன.
அவனது மனைவி ஜெஸ்சி மற்றும் குழந்தைகள் சுவிட்சர்லாந்தில் பாதுகாப் பாகக் குடிவைக்கப்படுகிறார்கள். போதைப் பொருள் கும்பல் தலைவன் மெனிடாஸ் உயிருக்கு அஞ்சி நாட்டிலிருந்து தப்பித்து ஓடிவிட்டதாக போலியான ஆவணங்கள் உருவாக்கப்படுகிறது. எமிலியா என்ற பெயரில் பெண்ணாக மாறிய மெனிடாஸ் வாழ்க்கை லண்டனில் தொடங்குகிறது.தனியே வாழும் எமிலியாவுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் குடும்ப ஏக்கம் மேலிடுகிறது.மீண்டும் மெக்சிகோவில் குடும்பத்துடன் வாழ ரீட்டாவை ஏற்பாடு செய்யக் கோருகிறாள். எமிலியா, குழந்தை களுக்குச் சின்னம்மா; ஜெஸ்சிக்கு சகோதரி என்ற ஏற்பாட்டில் வாழ்கிறார்கள். போதை கடத்தல்காரர்களால் கொலை யுண்டு காணாப் பிணங்களாய்ப் போன வர்களை அடையாளம் கண்டு உறவி னர்களிடம் ஒப்படைக்கும் தொண்டு நிறு வனத்தை ரீட்டாவின் உதவியோடு நடத்து கிறாள் எமிலியா. தொலைந்தவர் பிணங்க ளைப் பெறும் உறவினர்கள் நெகிழ்ச்சிக் கண்ணீரின் வழியே அன்பின் கனிவை உணர்கிறாள். எபிபேனியா என்பவள் காணாமல் போன கொடுமைக்கார குடிகாரக் கணவ னின் நிலையறிய எமிலியாவின் உதவியை நாடுகிறாள்.கணவன் இறந்ததை அறிந்து மகிழ்கிறாள்.பிணத்தைப் பெற மறுக்கி றாள்.இந்நிகழ்வு, அன்பிற்கு ஏங்கும் இரு வருக்குள்ளும் காதலை உருவாக்குகிறது. கணவன் இறந்துவிட்டானென நம்பும் ஜெஸ்ஸி,அவளது பழைய கள்ளக் காதலன் கஸ்டவோவ் என்பவனுடனான உறவை எவ்வித உறுத்தலுமின்றி புதுப்பிக்கிறாள். கள்ளக்காதலனோ மென்டாஸின் பழைய தொழில்முறை எதிரி. இவனை நம்பி குழந்தைகளோடு எமிலியாவை விட்டு ஓட திட்டமிடுகிறாள் ஜெஸ்ஸி.இதனை அறிந்த முன்னாள் பாசமிகு கணவனும், இன்றைய சகோதரி யுமாகிய எமிலியா அதிர்ச்சி அடைவ தோடு, அடுத்து என்ன செய்தாள் என்பதே மீதிக்கதை.
இசைப்படமாதலால்,அடுத்தடுத்த பாடல்களும்,பாடல் வரிகளின் அரசி யல்,சமூக அக்கறை சார்ந்த விடயங்க ளும்,நடன அசைவுக்கேற்ற பின்னணி இசை யும்,நிறைவான புதிய திரை அனு பவத்தைத் தருகிறது. எமிலியாவுடன் வீட்டில் அடைபட்டுக் கிடப்பதாக உணரும் ஜெஸ்ஸி தன் உள்ளக்குமுறல்களை கொட்டும் பாடல் இரவில் எமிலியாவின் அரவணைப்பில் உறங்கும் பெண்குழந்தை எமிலியாவின் உடல் வாசனையுடன் தன் தகப்பனின் உடல் வாசனையை ஒப்பிட்டுப் பாடும் பாடல் எமிலியாவுக்கு எபிபேனியாவின் மீது காதல் அரும்பும் தருணத்தில் தான் ஆண் பாதி பெண் பாதியாய் ஆன அரை உயிரா? அரைப் பிணமா? இல்லை அனைத்துக் கூறுகளும் கொண்ட முழுமைபெற்ற பிற வியா? நான் யார்?எனக் கேள்விச் சரங்கள் கொண்ட பாடல் என்று படத்தில் வரும் அத்தனை பாடல்களும் அழகிய உணர்வு பூர்வமான இசையுடன் அமைந்தவை. காணாமல் போனவர்கள் பற்றி கைதிகளி டம் ரீட்டா விசாரிக்கிறாள். கொல்லப் பட்டவர்களைத் துண்டு துண்டாக்கி வீசிய தாகவும், சிலரை உயிரோடு எரித்துக் கொன்றதாகவும், சிலரைக் கைகால்களைக் கட்டி ஆற்றில் வீசியதாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். இது கேட்போரைச் சில்லிடவைக்கிறது.
சமூகவிரோதக் கும்பலின் வன்முறைக்கு எதிரான எமிலியாவின் போராட்டத்தின் நீட்சியாக படத்தின் இறுதிக் காட்சியில் அன்னை மேரியின் சப்பர ஊர்வலம் நடக்கிறது. இது இறந்த எமிலியாவின் நினைவாக எபிபேனியா நடத்தும் நிகழ்ச்சி. கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். மீட்பரான மேரி மாதா எமிலியாவின் படிமமாக உணர்த்தப்படுகிறது. ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தரகர்களுக்கு விருந்தளித்து தன் தொண்டு நிறுவனத்துக்கு எமிலியா நிதி திரட்டுவது ரீட்டாவுக்கு பிடிக்க வில்லை.தன் எதிர்ப்பை இசை நடனத்தின் வழி யாக வெளிக் காட்டுகிறாள்.நடன இயக்கு நர் டாமியன் ஜாலட் இதனை அற்புதமாக வடிவமைத்துள்ளார். எமிலியா, ஜெஸ்ஸி, ரீட்டா மற்றும் எபிபேனியா போன்ற பெண் பாத்தி ரங்களின் தன்மைக்கேற்ற ஆகச்சிறந்த நடிப்பை தந்துள்ள கேஸ்ஹான், ஹோமஸ், ஷால்டனா, அட்ரியானா பாஷ் ஆகிய நால்வருக்குமே 2024க்கான சிறந்த நடிகைகளுக்கான கான்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. 2024க்கான பின்னணி மற்றும் பாட லிசைக்காக கான்ஸ் சவுண்ட் ட்ராக் விருது கிளமெண்ட் டியூகால் (பின்னணி), ஹேமிலி (பாடல்) ஆகியோருக்கு வழங் கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானதே. சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் உள்ளிட்ட கான்ஸ் விருதுகள் பல பெற்ற பெருமைக்குரியவரான ஜாக்கூஸ் ஆடார்ட் என்ற பிரான்சு நாட்ட வரே இப்படத்தை எழுதி,தயாரித்து, இயக்கி யும் உள்ளார். 2024க்கான சிறந்த இயக்கு நர் கான்ஸ் விருதை இப்படத்திற்காக வென்றுள்ளார். இது இயக்குநரின் படைப்பாளுமைக்குக் கிடைத்த பெருமை. 97 ஆவதுக்கான ஆஸ்கருக்கு, உலகச் சிறந்த திரைப்படப் பிரிவுக்கான இறுதி தேர்வுப் பட்டியலில் (Shortlisted) இப்பட மும் உள்ளது. இதனை முபியில் காண லாம்.