tamilnadu

img

உள்நாட்டு பானங்களை அருந்துங்கள்: அரசு வேண்டுகோள

சென்னை, மார்ச் 20 - கோடைக் காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்கும் இளநீர், நுங்கு, நீரா, பதநீர் போன்ற பாரம்பரிய உள்நாட்டு பானங்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சராசரியாக பகல் வெப்பநிலை 35 டிகிரி  செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்  கூடும் என்பதால், பொதுமக்கள் இந்த நேரத்தில் உடல் நலத்துக்கு ஏற்ற பானங்களை பருக வேண்டியது மிகவும் அவசியம். தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் இளநீர், நீரா, உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இளநீரில்  சர்க்கரைச் சத்து, தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இளநீர், குடல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான உபாதைகளினால் பாதிப்புக்குள் ளாகும் குழந்தைகள், வயதானோர்கள் மற்றும் நோயாளிக ளுக்கு மிகவும் சிறந்த பானமாகும்.

இளநீரை அருந்துவதால், நமது உடல் குளிர்ச்சி அடை கிறது. மேலும், தென்னை மரத்தில் உள்ள மஞ்சரியிலிருந்து கிடைக்கும் நீரா பானம் மிகவும் ஆரோக்கியமான பானம். நீரா பானத்தில் கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவு மிகவும் குறைவாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பானம் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் நீரா பானத்தினை உற்பத்தி செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.நொதிப் பதற்கு முன் கொள்கலன்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நீரா பானம் தற்போது நகர்ப் புறங்களில் உள்ள விற்பனை நிலை யங்களிலும் கிடைக்கிறது. அதேபோன்று, நமது மாநில மரமாக பனை உள்ளது. அனைத்து விதமான இயற்கை சூழலிலும் வளரும் தன்மை  கொண்ட பனை மரங்களிலிருந்து நுங்கு, பதநீர் போன்ற விளை பொருட்கள் கிடைக்கின்றன.

இவற்றில் மனித ஆரோக்கி யத்திற்கு தேவையான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள், புரதம் உள்ளிட்ட அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இத்தகைய ஆரோக்கியம் நிறைந்த நுங்கு, தமிழகத்தில் மார்ச் முதல் ஜூன் முடிய கோடைக் காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியவை. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய இளநீர், நுங்கு,  பதநீர் போன்ற பானங்கள் கிராமங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் ஒரு சில நகர்ப் புறங்களிலும் விற்பனையாகிறது. அதிக விளம்பரம் இல்லாமல், உற்பத்தி செய்யப்படும் இத்தகைய பானங்களின் விற்பனை விலை குறைவாகவே உள்ளது. இதனால் ஊட்டச்சத்து மிகுந்த இவ்விளைபொருட்களின் முக்கியத்துவத்தை மக்கள் அதிகம் உணர்வதில்லை. கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் தாக்கல்  செய்யப்பட்ட முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கை யில், பனை மர மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தந்து,  

பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தது. தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கும், பனையிலிருந்து கிடைக்கும் பொருட்களின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் அரசு சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், நீரா  மற்றும் பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு  போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உள்ளூர் பானங்களை, கோடைக் காலத்தில் பொதுமக்கள் எவ்விதத் தயக்கமு மின்றி பருக வேண்டும். தமது குழந்தைகளுக்கும் இதன் நன்மைகள் குறித்து விளக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள், அரசு விழாக்கள், அலுவலகக் கூட்டங்க ளில் இப்பானங்களை விநியோகிக்க அதிக முக்கியத்துவம் தர வேண்டும். கோடைக் காலத்தில் இதுபோன்ற உள்ளூர்  பானங்களை பருகுவதால், நமது உடல் நலம் பேணப்படு வதுடன், தமிழ்நாட்டில் உள்ள தென்னை, பனை விவசாயிகளின் வருமானமும் உயரும். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.