tamilnadu

img

வண்ணக்கதிர் 4

நாடகம், இசைச் சிற்பத்துடன் அசத்தும் கோடைச் சிட்டுகள்

குழந்தைகளின் இயல்பான முன்னேற்றத்தை திசைமாற்றும் கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் போதையூட்டும் செயல்பாடுகளும் வேகமாக ஊடுருவி விடுகின்றன. அவற்றுக் எதிராக உண்மையைப் பகுத்தறியும் ஆற்றல் கொண்ட குழந்தைகளின் உலகை அவர்களுக்கு திறந்து காட்டும் பணியை மேற்கொண்டுள்ளது குமரி மாவட்ட பாலர் பூங்கா. கோடைச் சிட்டுகள் என்கிற பெயரில்  சிறாரை ஒருங்கிணைத்து நாடகம், இசைச்சிற்பம், பாடல்கள், நடனம் என  அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துள்ளது பாலர் பூங்கா.  இதன் குமரி மாவட்ட அமைப்பாளர் சி.சசி குமார் கூறுகையில், கொரோனாவுக்கு முன்பே பாலர்பூங்கா அமைக்க முயற்சி செய்தோம். பெருந்தொற்று காலத்தில் அதை முன்னெடுக்க முடியாமல் தடை பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் இதற்கான  பணி முன்னேற்றம் கண்டு வருகிறது. அரு கில் உள்ள கேரளத்தில் செயல்படும் பாலர்  சங்கத்தையே முன்னோடியாக கொண் டுள்ளோம் என்றார். 100 சிறார்கள் 5 நாள் பயிற்சி மூன்றாவது ஆண்டாக அண்மையில், குமரி மாவட்ட பாலர் பூங்காவின் 100 சிறார்  களுக்கு கேரள பாலர் சங்க கருத்தாளர்கள்  கோபகுமார், பிரேமன் தோப்பில், ஆதிரா, அபர்ணா அனுஸ்ரீ, ஆகியோர் மே 14 முதல்  18 வரை திருவனந்தபுரத்தில் பயிற்சி அளித்த னர். கேரளத்தில், வேனல் தும்பிகள்’ என்கிற  பெயரில் பாலர் சங்கம் கலை நிகழ்ச்சி களை நடத்தி வருகிறது. அவர்கள் உரு வாக்கிய நாடகங்கள், இசைச்சிற்பம் என  ஒரு மணி நேர நிகழ்ச்சிகளுக்கான பயற்சி யை ஐந்தே நாட்களில் பெற்று குமரி மாவட்டத்தில் அரங்கேற்றி வருகிறார்கள் பாலர் பூங்காவின் கோடைச் சிட்டுகள்.  தேசத்தந்தை காந்திஜியின் படுகொலை யை விளக்கும் ‘சத்திய சோதனை’ என்கிற நாடகமும் போதை, மூடநம்பிக்கைக்கு எதி ரான பொறி என்கிற நாடகமும் அதோடு, 3 இசை சிற்பங்களையும் நிகழ்த்தி வருகின்ற னர். ஜூன் முதல் நாளன்று வில்லுக்குறி உட்பட 4 நிகழ்ச்சிகளை குறுகிய காலத்தில்  நடத்தியுள்ளனர். தன்னம்பிக்கையும்,  ஆளுமைத் திறனும் இதுகுறித்து பாலர் பூங்காவின் மாவட்  டச் செயலாளர் குயிலி, துணைத் தலைவர்  அனு ஆகியோர் கூறுகையில், பாலர் பூங்கா வில் இணைந்த பிறகு தன்னம்பிக்கையும், ஆளுமைத்திறனும் இயல்பாக வளர்கிறது. பெற்றோரும் குடும்பத்தினரும் பெருமை யாகப் பார்க்கிறார்கள். அவர்களது அணுகு முறையில்கூட மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மற்ற சிறுவர்கள் கூறுகிறார்கள். நூறு பூங்காக்களை இந்த ஆண்டு உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 42 பாலர் பூங்காக்களை அமைத்துள்ளோம். இந்த ஆண்டுதான் கலை நிகழ்ச்சிகளில் பயிற்சி பெற்றுள்ளோம். இதை அடித்தளமாக கொண்டு நாங்களே நாடகங்களையும், இதர கலை வடிவங்களையும் உருவாக்க உள்ளோம் என்றார். நாடகங்களையும், பாடல்களையும் மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்தவர்கள் தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயகாந்தன், ஆனந்த், தமிழ்நாடு அறிவி யல் இயக்க தலைவர்கள் சசிகுமார், சிவ ஸ்ரீரமேஷ். கேரள பாலர் சங்க நிர்வாகி களோடு இணைந்து மேதினி, செல்வி ஆகி யோர் சிறார்களுக்கு பயிற்சி அளித்துள்ள னர். 5 நாட்கள் பயிற்சியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் உஷாபாசி, நெய்யாற்றின்கரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆன்சலன், பெற் றோரும் சமூக ஆல்வலர்களுமான என். ரெஜீஷ்குமார், நீலாம்பரன், மேரி ஸ்டெல்லா, அலெக்ஸ், கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறாருக்கு உற்சாகமூட்டினர். மதம் சார்ந்த உணர்வுகள், மூட நம்பிக்கைகள், திசைதிருப்பல்களைக் கடந்து நமது சிறுவர்களை பொதுத் தளத்தில்  நம்பிக்கையுடன் செயல்பட வைக்கும் முயற்சிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவை. பாலர் பூங்கா அதற்கான புள்ளி வைத்துள்ளது. அழகான கோலமாக மாற்றுவது சமூகத்தின் பொறுப்பு. 

கவனம் ஈர்த்த நாடகங்கள் சத்திய சோதனை நாடகம், மாறுபட்டதாகவும் விறுவிறுப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காந்தியை சுட்டுக்கொல்லும் நிகழ்வு முதலில் பள்ளியில் நடக்கும் ஒரு நாடக ஒத்திகையாக தொடங்கி, சிரிக்க வைத்து- இறுதியில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதும் பார்வையாளர்களை பதைபதைக்க வைக்கிறது. இதுபோல் போதையும், மூட நம்பிக்கையும் இரண்டறக்கலந்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டு, போதைக்கும் மூடநம்பிக்கைக்கும் இரையாவோர் இறுதியில் விழிப்படைவதாக நிறைவு பெறுகிறது.