குடிநீர் உரிமையைப் பறிக்க சூயஸ் நிறுவனத்தை அனுமதிக்காதீர்!
ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறை கூவலுக்கு இணங்க, ஜூன் 11 அன்று துவங்கிய மாநிலந் தழுவிய மகத்தான மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் 20 ஆம் தேதி நிறைவுற்றது. இதையொட்டி, சென்னை மாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின் வெற்றி
இத்தகைய பிரச்சார இயக்கம் திண்டுக்கல்லில் நடைபெற்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மீது, பாஜக - இந்து முன்னணி குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள னர். மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் இந்துத்துவா சக்திகளின் சீர்குலைவு வேலையை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த பிரச்சாரத் தினால், இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் ஆத்திரமுற்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள இயலாத சங்கிகள் ஆத்திரமடைந்துள்ளது கட்சி நடத்திய பிரச்சாரம் வெற்றி அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கை களை எதிர்த்தும், மாநில உரிமைகளை பறித்திடும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் மக்கள் சந்திப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் நடை பெற்றுள்ளது. மாநில உரிமைகளை பாதுகாக்க ஆளு நரின் அடாவடிகளை எதிர்த்து, மாநில அரசு தொடர்ந்து போராடி வருகிறது. அதேநேரத்தில் மாநில அரசு அம லாக்கி வரும் தாராளமய பொருளாதாரக் கொள்கை மாநிலத்து மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இந்நிலையில், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டண உயர்வை கைவிட வேண்டும்; புதிதாக அறிவிக்கப் பட்டுள்ள குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில்...
மாநிலம் முழுவதும் 20 ஆம் தேதியோடு நிறைவு பெற்றுள்ள மக்கள் சந்திப்பு இயக்கம், கோவை மாவட்டத்தில் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் குறிப்பாக, கோவை மாநக ராட்சி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார குழுக்கள் மக்களைச் சந்தித்த போது, மாநகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை குறித்து பெரும்பாலான மக்கள் தங்கள் வேதனையை தெரி வித்துள்ளனர். கோவை மாநகராட்சியில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாதபோது, கடந்த அதிமுக மாநில அரசு, பன்னாட்டு நிறுவனமான சூயஸ் கம்பெனியிடம், மாநகர மக்களுக்கு குடிநீர் உரிமையை அளித்தது. ரூ.3167 கோடி மதிப்பீட்டில் 28 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைக் கடுமையாக எதிர்த்தது. அப்போதே மாநகராட்சி முழுவதும் வீடு, வீடாக மக்களைச் சந்தித்து பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. அதன்பிறகு, இக்கட்டு ரையாளரின் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டத் தலைவர்கள் பங்கேற்புடன், மாநக ராட்சி மற்றும் மண்டல அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம், 2018 செப்.18 இல் நடைபெற்றது.
குடிநீர் உரிமைக்காக...
குடிநீர் நமது உரிமை, சூயஸ் நிறுவனமே வெளி யேறு என முழக்கமிட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக இயக்கம் நடத்தி வருகிறது. அப்போது எதிர்க்கட்சி யாக இருந்த திமுகவும் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதர சில அரசியல் இயக்கங்களும் போராட்டங்களை நடத்தினர். கோவை மாநகராட்சியின் குடிநீரின் விநியோக உரிமையை தனியார்மயப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் குடிநீர் கட்டணங்கள் கடுமையாக உயரும் என மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித்து. மக்கள் மத்தியிலும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இப்பின்னணியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக தனது மாவட்ட வாரியான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது. கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றால் சூயஸ் பன்னாட்டு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்து, மாநகராட்சியே குடிநீரை வழங்கிடும் பணியை மேற்கொள்ளும், என அறிவித்தது. அத்து டன், கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சிப்பொறுப்பேற்றால் சூயஸ்-க்கு கொடுக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும், என்று உறுதியளித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தது. எனினும், சூயஸ் கம்பெனிக்கு கொடுக்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமை இன்று வரை ரத்து செய்யப்படவில்லை.
இறுகும் சூயஸ் நிறுவனத்தின் பிடி
தற்போது மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்கி வருகிறது. இப்பகுதி யில் குடிநீர் கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், சூயஸ் கம்பெனியின் நிர்பந்தத்தால், வீடு களின் பரப்பளவை கணக்கில் கொண்டு, குடிநீர் கட்ட ணம் விதிக்கப்படும் என கடந்த மாதம் நடைபெற்ற கோவை மாநகராட்சியின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத்தை தீர்மானிக்காமல், கட்டிடத்தின் பரப்பளவைக் கொண்டு கட்டணத்தை தீர்மானிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில், ஏழை மற்றும் விளிம்பு நிலையிலுள்ள குடும்பங்கள், பொதுக்குழாய்களில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது படிப்படியாக மாநகரத்தில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்களிலுள்ள பொதுக்குழாய்கள் அகற்றப் படும் என்றும் மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இம்முடிவு, நவீன தாராளமய கொள்கைகளின் ஒரு பகுதியாக, குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் பன்னாட்டு நிறுவனத்திற்கு அளித்து, குடிநீரை வணிகப்பொருளாக மாற்ற வழிவகுத்துவிட்டது.
மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பது ஏன்?
பல நாடுகளில் குடிநீர் வழங்கும் உரிமை, தனியார் கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டு, பல மடங்கு கட்ட ணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தினால் குடிநீர் தனியார்மயம் ரத்து செய்யப்பட்டது. பொலிவியாவில் கொச்சபம்பா நகரில் குடிநீர் விநியோகம் தனியார்மயம் ஆக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து குடிநீர் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்ததை எதிர்த்து, மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இப்பிண்ணனியில் அந்நகரிலிருந்து தனி யார் குடிநீர் நிறுவனம் விரட்டப்பட்டது. 2004ல் உருகுவே நாட்டில் இதே போன்று குடிநீர் விநியோகம் தனியார்மயமானபோது, அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை தொடங்கினார்கள். அரசு பொது வாக்கெடுப்பை நடத்தியது; 65 சதவிகித மக்கள் குடிநீர் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே இயற்கை, கனிம வளங்களை தனியாருக்கு கொடுக்க மாட்டோம் என்று திருத்தத்தை அரசு கொண்டு வர நேர்ந்தது. தென் ஆப்பிரிக்காவில் தனியார் நிறுவனத்தால் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணங்களை கட்ட முடியாமல் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை அரசு துண்டித்தது. இது போன்று பல நாடுகளின் அனுபவத்தைக் கணக்கில் கொண்டே மார்க்சிஸ்ட் கட்சி குடிநீர் தனியார்மயத்தை எதிர்த்தது.
பிரான்ஸ்,ஜெர்மனியின் அனுபவம்
மேலும், கோவையில் குடிநீர் வழங்கும் உரிமையை பெற்ற சூயஸ் நிறுவனம், அதனுடைய சொந்த நாடான பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரீசில் குடிநீர் விநியோகத்தை செய்து வந்தது. குடிநீர் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்ததும் மற்றும் முறையான விநியோகம் இல்லாததும், வெளிப்படைத் தன்மை இன்மை போன்ற காரணங்களால், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இப்பின்னணி யில் கடந்த 2010 ஆம் ஆண்டு சூயஸ் நிறு வனத்துக்கு கொடுக்கப்பட்ட உரிமை ரத்து செய்யப் பட்டு, பாரீஸ் மாநகராட்சியே குடிநீர் வழங்கும் பொறுப்பை ஏற்று குடிநீர் வழங்கி வருகிறது. அதே போல, தெற்கு ஜெர்மனியில் போடப்பட்ட மேகால் பைப் லைன் (MEGAL Pipeline) ஒப்பந்தத்தில் போட்டி நிறுவனங்களுடன் கூட்டு களவு ஒப்பந்தத்தில் ஈடு பட்டதால், சூயஸ் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஆணை யம் 553 மில்லியன் யூரோ (4424 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. கோவை மாநகராட்சியில் கூட புதிய குடிநீர் குழாய்களை முறையாக அமைக்காத காரணத்தினால், சூயஸ் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குறித்த காலத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பணி யை முடிக்காமல் கால நீட்டிப்பு செய்து வருவ தோடு, தற்போது ஏற்கனவே போட்ட ஒப்பந்த தொகை போதாது என்று சொல்லி திருத்தப்பட்ட மதிப்பின் அடிப்படையில் கூடுதலாக 180 கோடி ரூபாய் அனு மதிக்க வேண்டும் என்று சூயஸ் வலியுறுத்தியதன் விளைவாக மாநகராட்சியில் அதற்கும் தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளன. எனவே, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் மக்கள் பணத்தை தனியார் நிறு வனத்திற்கு கொட்டிக் கொடுப்பது முற்றிலும் தேவை யற்ற செயல் ஆகும். இதனால் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு, குடிநீர் வழங்கலை பயன்படுத்தி, பன்னாட்டு நிறுவனம் கொள்ளையடிக்கும் நிலைமை ஏற்படும்.
ரத்து செய்க!
கோவை மாநகரத்து மக்கள், கேரள வனப்பகுதி யிலுள்ள சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் பெற்று வருகின்றனர். இந்த அணைக்கு தண்ணீர் வரும் வழியில் ஏராளமான மூலிகைச் செடிகள் உள்ளன. இதனை தழுவி வருவதால், சிறுவாணி குடிநீர் ஆசி யாவிலேயே சுவை மிகுந்த குடிநீர் பட்டியலில் 2 ஆவது இடத்தை பெற்றுள்ளது என வல்லுநர்கள் குறிப்பிடு கின்றனர். இத்தகைய, இயற்கையின் கொடையை ஒரு பன்னாட்டு நிறுவனம் கொள்ளையடிக்க அனு மதிக்கக்கூடாது. மக்கள் நலனை கணக்கில் கொண்டு, மாநில திமுக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியின் அடிப்படையில், சூயஸ் பன்னாட்டு நிறு வனத்திற்கு அளிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் உரிமை யை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.