பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிகள், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு திமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. திருக்களாச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே, நூறுநாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்குத் தர வேண்டிய நிலுவை தொகை ரூ.4,034 கோடியைவழங்க கோரி, மத்திய அரசை கண்டித்து தி.மு.க. செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எம்.சித்திக், தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜுபையர் அகமது, மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊடகவியலாளர் விக்கி, மாவட்ட பிரதிநிதி கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேப்போன்று. திருக்கடையூர் தபால் நிலையம் முன்பு மத்திய ஒன்றியச் செயலாளர் அமுர்த. விஜயகுமார் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.