சென்னை, அக். 23- தீபாவளி பண்டிகை அக்.24 அன்று (திங்கள்) கொண்டாட ப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு ரயில்களில் செல்ல பயணிகள் கூட்டம் அலை மோதியது. சென்னை யில் முக்கியரயில் நிலையமாக திகழும் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணி கள் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்ய இடம் கிடைக்காமல் தவித்தனர். சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் ரயிலில் இடம் கிடைக்காமல் பயணிகள் காத் திருந்தனர். முன்பதிவு செய்தவர்கள் பெரும்பாலா னோர் ரத்து செய்யாமல் பயணம் மேற்கொண்டதால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் அனை வருக்கும் இடம் கிடைக்க வில்லை.இதனால் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருந் தனர். மேலும்காத்திருப்போர் பட்டியலில்உள்ளவர்களுக்கு சீட்டுகள் உறுதிபடுத்தப் படாததால் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் ரயில் நிலைய பகுதிகளில் தவித்தனர்.
ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்காததால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டு உள்ளது. பண்டிகை காலங்க ளில் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், தீபா வளி பண்டிகையை சொந்த ஊரில் மகிழ்ச்சியாக கொண்டாடு வதற்கு ரயிலில் செல்வதற்கு வந்து உள்ளேன். தற்போது ரயி லில் கூட்டம் அதிகமாக இருக்கி றது. ரயிலில் இடம் கிடைக்காமல் பல்வேறு மக்கள் தவித்து வரு கிறார்கள். எனவே கூடுதல் பெட்டிகளை இணைத்து மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வருங்காலங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு ரயில்கள் போதவில்லை தற்போதைய சிறப்பு ரயில்கள் போதவில்லை. இந்த பற்றாக்கு றையை போக்க கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் போதுமான தாக இல்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வருடம் தோறும் தீபாவளி பண்டிகை நாட்களில் இது போன்ற நிலைமை நீடிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினர்.