பன்முகத்தன்மை, மொழிவழிப் பண்பாடு-ஒற்றுமையைக் குலைப்பவர்களே உண்மையான தேச விரோதிகள்!
இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மை, மொழிவழிப் பண்பாடு, மக்களின் ஒற்றுமையைக் குலைப்ப வர்களே உண்மையான தேச விரோதிகள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்ப தாவது: இந்தி மட்டும்தான் இந்தியா வின் ஆட்சிமொழி என்று இந்திய அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த வட இந்தியத் தலைவர்கள் சிலர் வலியுறுத்திய போது, சென்னை மாகாணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பி னரான டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி போன்றவர்கள் அதனை எதிர்த்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். உறுதிமொழி தந்தார் நேரு! அரசியல் சட்டத்தையே இந்தி மொழியில்தான் நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் பிடிவாதம் பிடித்தபோது, பண்டித ஜவ கர்லால் நேரு போன்றவர்கள் அதனை ஏற்காமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆங்கிலத் தில் அதனை நிலைநிறுத்தினர். ஆட்சி மொழியாக இந்தியும், இணை ஆட்சி மொழியாக ஆங்கில மும் இருக்கும் என அறிவித்தனர்.
மீண்டும், 1960-இல் ஆட்சி மொழி என்ற பெயரில் திணிக்கப் படும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் குரல் எழுப்பினர். அப்போதும், பிரதமர் நேரு தனது உறுதிமொழி மீறப்படாது எனக் கடிதம் வாயிலாக உறுதி செய்தார். அற்பக் காரணம் கூறும் பாஜகவினர் நேரு போன்ற தலைவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை உருவாக்கினார்கள். அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதற்கு எதிராக தில்லியில் குரல் எழுப்பினர். இன்றைக்கு இந்திய ஒன்றி யத்தை ஆட்சி செய்கின்ற கட்சி யின் தலைவர்கள் இந்தியைத் திணிப்பதும், அதை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதுமாக இருக் கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டு பாஜக தலைவர்களோ, இந்தி தெரியாத தமிழர்களை நோக்கி வடமாநிலத் தவர்கள் திட்டினால் புரிந்து கொள்ள முடியாது என்றும், வட மாநிலங்களுக்கு சென்றால் உண வகங்களில் ஆர்டர் பண்ண முடியாது என்றும், கழிவறை செல்வதற்குக்கூட இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் எல்லோரும் எள்ளி நகையாடும் வகையிலான அற்பக் கார ணங்களைச் சொல்கிறார்கள்.
இந்தியாவை ஆட்சி செய்யும் அவர்கள் அஞ்சுகிறார்கள் – அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றி யத்தின் பன்முகத் தன்மையையும் மொழிவழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப் பவர்கள் தான் உண்மையான தேச விரோதிகள். உயிரைக் கொடுத்தும், தமிழைக் காப்போம்! தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கி றோம். காலம் மாறிவிட்டது அதனால் இந்தியைத் திணிப்போம் என்கிறார்கள் இன எதிரிகள். எத்தனை காலங்கள் மாறினாலும் அதற்கு ஈடுகொடுத்து நிற்கும் செம்மொழியாம் தமிழ் மீது இந்தி – சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம்! இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.