குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுடன் சமூக நல்லிணக்க முன்னணி சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் அனந்து (வேளாண் பாதுகாப்பு), கீதா ( அமைப்புசாரா), அமைப்பின் ஆலோசகர் எம்.சி.ராஜன், குல்கர்னி, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனமுல் அசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக வேட்பாளருக்கு பாரம்பரிய விதைகள் வழங்கப்பட்டது.