பழமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை, ஜூலை 30 - புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் ராயபுரம் அருகே, ஆலங்குடி பெரியகண்மாயின் நீர்ப்பிடிப் பகுதி களில் பழமையான இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சுப.முத்தழகன், வர லாற்று ஆர்வலர்கள் நாராயண மூர்த்தி, ராகுல் பிரசாத் குழுவினர் அண்மையில் கள ஆய்வு நடத்தினர். இதுகுறித்து பேராசிரியர் சுப.முத்த ழகன் கூறுகையில், ராயவரத்தில் இருந்து முனசந்தை செல்லும் சாலை யில், ஆலங்குடி கிராமத்துக்கு வடக்கே ஆலங்குடி பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்தக் கண்மாயின் வடமேற்கு மூலையில் நோன்பு உண்ணி ஐயனார் கோவில் உள்ளது. இதை யொட்டி, ஏராளமான இடங்களில் உடைந்த செம்புரான் கற்களால் ஆன குவியல்கள் இருப்பது தெரியவந்தது. அவ்விடத்தில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டதில் உருகிய நிலையில் தாதுக் கற்கள், இரும்பு கசடு கள், சுடுமண் துருத்தி குழாய்களின் உடைந்த பாகங்கள், பழமையான பானை ஓடுகள் போன்றவை கிடைக்கப் பெற்றன. இங்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட உலைகள் செயல்பட்டிருக்க வேண்டும். அதற்குச் சான்றாக இந்தக் குவியல்கள் ஒரு பெரிய மேடாக தொடர்ந்து அமைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை திருவரங்குளம், பொற் பனைக்கோட்டை, பெருங்களூர், விளா ப்பட்டி, பொன்னம்பட்டி என பல்வேறு ஊர்களில் இதுபோன்ற பழமையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. உள்ளூர் இரும்புத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அருகாமை யில் கிடைக்கக் கூடிய செம்புரான் கற்கள் போன்ற தாதுக்களை, உயர் வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கும் தொழில் நுட்பங்களைக் கொண்டு இந்த உலைகளில் இரும்புப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலை கள் பெரும்பாலும் நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, நீர் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. இந்த உருக்கு உலைகளின் காலத்தி னை முறையான அறிவியல் ஆய்வுகள் மூலமாகவே தெரிந்து கொள்ள இயலும். ஏனெனில் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை பல நூறு ஆண்டுகளாக இந்த உள்ளூர்த் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இரும்பு தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் கண்மாயின் தென்கிழ க்கு மூலையில் சாலையையொட்டி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையான ஈமச் சின்னங்களான கல்வட்டங்கள், உடைந்த நிலையில் கல்பதுக்கைகள் அமைந்துள்ளன. அங்கு கிடைக்கபெறும் உடைந்த பானை ஓடுகள் போலவே, உருக்கு உலைகள் அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் பானை ஓடுகளும் ஒத்து உள்ளன என்றார் முத்தழகன்.