tamilnadu

img

மிசோரம் பால விபத்து நீதி விசாரணை நடத்த கோரிக்கை

பாஜக கூட்டணி ஆளும் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்  றான மிசோரத்தின் தலைநகர்  ஐஸ்வாலுக்கு அருகே குருங் ஆற்றில் பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலை யங்களை இணைக்க 104 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் புதனன்று இடிந்து விழுந்தது. இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 23 ஆக உயர்ந்த நிலையில், படு காயங்களுடன் தொழிலாளிகள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். உயிரிழந்த 23 பேர் உட்பட, பால கட்டுமான பணியில் ஈடுபட்ட 40 பெரும்  மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்  தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலா ளர்கள் ஆவர்.

சிஐடியு இரங்கல்

மிசோரம் பால விபத்து செய்தி அறிந்த வுடன் மால்டா மாவட்டத்தின் இந்திய கட்டு மானத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு)  நிர்வாகிகள், இறந்தவர்களின் கிராமங்க ளுக்குச் சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் மற்றும் இரங்கலைத் தெரிவித்தனர். மேலும் மிசோரம் மாநில நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு உயிரிழந்த தொழிலாளிகளின் உடல்களை மால்டா மாவட்டத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், ஒன்றிய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு போதுமான இழப்பீடு மற்றும்  வேலை வழங்க விரைவாக ஏற்பாடு செய்து விபத்து தொடர்பாக முழுமை யான உயர்மட்ட நீதி விசாரணையை நடத்த வும் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள் ளது.

நிவாரணம் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், கடுமை யான காயங்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு  காயங்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண மாக வழங்கப்படும் என ரயில்வே துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிவா ரணம் அறிவித்துள்ளார். பிரதமர் நிவா ரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயம்  அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.