திருவண்ணாமலை, நவ. 25 - ஒன்றிய பாஜக அரசின் தவறான அணுகு முறைகள் காரணமாக கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்து வருவதால் ஜனவரி 28 அன்று சென்னையில் கரும்பு விவசாயி கள் போராட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் பால முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கடந்த 2011- 12ஆம் ஆண்டு களில் 8 லட்சம் ஏக்கர் கரும்பு சாகுபடி செய்யப் பட்டு, 23 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப் பட்டது. தற்போது இரண்டே கால் லட்சம் ஏக்கர் மட்டும் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசின் அணுகுமுறையே சாகு படி பரப்புக் குறைவுக்கும், உற்பத்தி வீழ்ச்சிக்கும் காரணமாகும். எனவே, கரும்பு உற்பத்தியை அதிகரிக்க டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின் படி, 5 கோடி கரும்பு விவசாயி கள் நலன் கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5500 விலை வழங்க வேண்டும். ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்த மாநி லப் பரிந்துரை விலையை (State Advised Price - SAP) மாநில அரசு நிறுத்தி உள்ளது. எஸ்ஏபி மீண்டும் அறிவித்து வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டும் தொழிலாளர் களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆலை நிர்வாகமே வெட்டுக் கூலியை வழங்கி, பின்னர் கரும்பு விவசாயிகளின் பணத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் நடவு மானியமாக கரும்பு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் வழங்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ஒன்றிய அரசு நிதியில் இருந்து தமிழகத்திற்கு ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். மூடி கிடக்கும் தரணி சர்க்கரை ஆலை விவ சாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி பணத்தை பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்ஏபி பாக்கி ரூ. 1200 கோடியை தனியார் சர்க்கரை ஆலைகள் இடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 28-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் போராட்டம் நடத்த மாநிலக்குழுவில் திட்டமிடப் பட்டு உள்ளது. இவ்வாறு டி. ரவீந்திரன் பேட்டியில் கூறி யுள்ளார்.