புதுச்சேரி, மார்ச்.6- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்ச் 29 ஆம் தேதி புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங் கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிகர மாக்குவது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட ஒன்றிய தொழிற்சங்க தலை வர்களின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியுசி தலைமை அலுவ லகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஐடியுசி மாநிலத் தலைவர் அபிஷே கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, முத்துராமன், சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் கொளஞ் சியப்பன், ஐஎன்டியூசி நிர்வாகி சொக்கலிங்கம், ஏஐசி சிடியு மாநில நிர்வாகி மோதிலால், எல்.எல்.எப் தலைவர் கலைவாணன், எம்எல்எப் மாநில நிர்வாகிகள் வேணுகோபால், வேதா, ஏஐயூடியூசி நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் கூட்ட த்தில் கலந்து கொண்டனர்.
முழு அடைப்பு போராட்டம்
ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29, ஆகிய இரு தினங்க ளில் நடைபெறும் அகில இந்தியபொது வேலை நிறுத்தத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்துவது. பொது வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பு போராட்டத்தின் கோரிக்கை களை விளக்கி மார்ச் 16 ல் சுதேசி பஞ்சாலை எதிரில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மார்ச் 23, 24 ,25 தேதிகளில் வேலைநிறுத்தத்தை விளக்கி புதுச்சேரி முழுவ தும் பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும் முழு அடைப்பு நாளன்று ராஜா தியேட்டர் அண்ணா சிலை, புதிய பேருந்து நிலையம், இந்திரா காந்தி சிலை, காலாபட்டு, வில்லியனூர், சேதராபட்டு, திருக்கனூர் மதகடிப்பட்டு, பாகூர், தவளக்குப்பம், காரைக்கால் உள்ளிட்ட 12 மையங்களில் மறியல் போராட்டம் நடத்து வதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.