tamilnadu

img

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.21- நாகர்கோவில் மாநகராட்சி யில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்திடவும், குடிநீர் வினி யோகத்தை முறைப்படுத்தவும், மருத்துவ கழிவுகளை பொது மக்கள் பயன்படுத்தும் சானலில் கலப்பதை தடுக்கவும், ஆக்கிர மிப்புகளை அகற்றவும் நடவ டிக்கை எடுக்காத நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாழனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி அலு வலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாநகர குழு உறுப்பினர் ராஜ நாயகம், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் பேசினர்.  இதில், மாநகர குழு உறுப்பி னர்கள் அஸீஸ், பரமசிவம், பெஞ்சமின், மனோகர் ஜஸ்டஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.