tamilnadu

img

விவசாயி அணைக்கரை மரணத்திற்கு நீதிக் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜூலை 31- தென்காசி மாவட்டம் கடை யம் ஒன்றியம், மந்தியூர் பஞ்சா யத்து, வாகைக்குளத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து குடும்பத்திற்கு நீதி கேட்டு, வெள்ளியன்று ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து, நெல்லை நாயகம் மற்றும் வனக்காவலர்களை உட னடியாக கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் கோசங்களாக எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு முத்துராஜன் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், கடையம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் கண்டன உரை யாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ்,  மேனகா, மாரிச்செல்வம், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முருகன், அருளாணந்தம், இரா.கிறிஸ்டோ பர், ஜெயராஜ், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ஜெகன்நாதன், அப்துல்ரகுமான், ஜமால்முகமது, வேல்முருகன், சேகர், துரை, முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.