tamilnadu

சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர்கள் அம்பை, முருகேசுக்கு சிபிஎம் வாழ்த்து

சென்னை,டிச.31-  சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் கள் அம்பை, முருகேஷ் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த் துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: சாகித்ய அகாதமி மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் அம்பை மற்றும்  மு.முருகேஷ் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய  அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், “சிவப்பு கழுத்துடன் ஒரு  பச்சை பறவை” என்கிற சிறுகதை தொகுப் புக்காக எழுத்தாளர் அம்பைக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். தமிழில் பெண்  விடுதலை நோக்கிலான படைப்புகளை கூர்மையோடும் அழகியலோடும் வெளிப் படுத்துவதில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள தனித்துவமான எழுத்தாளர் அம்பை. அவரின் படைப்பிற்கு சாகித்ய  அகாதமி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.  அதே போல, ஹைக்கூ என்ற ஜப்பா னிய கவிதை வடிவத்தை தமிழில் தொ டர்ந்து சிறப்பாக கையாண்டுவரும் கவி ஞர் மு.முருகேஷ், சிறுவர்களுக்கான நூல்களையும் எழுதி வருகிறார். இடது சாரி சிந்தனையாளராக எழுத்துப்பணி களை தொடர்ந்து மேற்கொள்கிறார். அவர் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற  படைப்புக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது பெருமகிழ்ச்சி தருகிறது. இரண்டு எழுத்தாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களை யும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.