tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு தீர்மானம் விளக்கப் பேரவை

சிபிஎம் அகில இந்திய மாநாடு  தீர்மானம் விளக்கப் பேரவை

புதுக்கோட்டை, ஜுன் 24-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய மாநாடு அரசியல் விளக்கப் பேரவைக்கூட்டம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் தீர்மானத்தை விளக்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி உரையாற்றினார். ஸ்தாபகத் தீர்மானத்தை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி உரையாற்றினார். கட்சியின் மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசினார். கல்விக்குழு கன்வீனர் அ.மணவாளன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள், பிராக்சன் உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.