அருப்புக்கோட்டை, பிப்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.10ஆயிரத்தை போராசிரியர் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்திடுவதற்காக தமிழகம் முழுவதும் கட்சியின் தோழர்கள் நிதி வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அருப்புக்கோட்டையில் நகர்குழு கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் ரவிசங்கர் மாநாட்டு நிதியாக ரூ.10ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமியிடம் வழங்கினார். நகர்குழு சார்பில் அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.80ஆயிரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமஸ், நகர் செயலாளர் பரமதயாளன், மூத்த தோழர் எஸ்.காத்தமுத்து ஆகியோர் மாவட்டச் செயலாளர் குருசாமியிடம் வழங்கினர்.