சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
தரங்கம்பாடி, ஜூலை 3- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் அருகேயுள்ள அரும்பா க்கம் பகுதியில் வீரசோழன் ஆற்றில் 5 ோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச்சு வர் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டது. மா பெரும் ஊழலுடன் நடந்ததால், தடுப்புச்சுவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், தர மான முறையில் மீண்டும் பணிகளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறு த்தியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் கிளை ஆறான வீரசோ ழன் ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் சேர்ந்த வராயன் ஆறு, குரும்பக்குடி வாய்க்கால் இரு பாசன வாய்க்கால்களிலும் 5 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு பக்கவாட்டுச் சுவர் அமைக்கப்பட்டது.
இப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரின் நிறுவனமான அன்னமார் கன்ஸ்ட்ரக்ஷன் மேற்கொண்ட நிலையில், கல்லணையில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடந்த வாரம் வீரசோழன் ஆற்றில் இப்பகுதிக்கு குறைந்த அளவில் வந்தபோது, புதிதாக அமைக்கப்ப ட்ட தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமடைந்து சரி ந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பணிகள் நடைபெறும் போதே தரமற்ற முறை யில் செய்வதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்ற ச்சாட்டியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில், தற்போது பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்ட பணிகள் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று அரும்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வட்டக்குழு உறு ப்பினர் எஸ்.ஏ.பஷீர் அகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் டி.சிம்சன், ராசையன், வட்டக்குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். உட னடியாக துரித நடவடிக்கை எடுத்து பணி களை முழுமையாக தரமான முறையில் செய்யவில்லையெனில் மீண்டும் போரா ட்டங்களை நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.