பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜுன் 28- வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 400 விவசாயிகள் பருத்தியை எடுத்து வந்தனர். இதில், 12 வணிகர்கள் கலந்து கொண்டு அதிகபட்சம் கிலோ ஒன்றிற்கு ரூ.75.89, குறைந்தபட்சம் ரூ.62, சராசரி ரூ.68.30 என விலை நிர்ணயித்தனர். ஏலத்திற்கு விற்பனைக் குழு செயலர் சரசு தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார்.