ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்!
சென்னை, ஜூன் 5 - சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களைத் தயாரிப்ப தற்கு, ‘ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா’ நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் சார்பில் இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் ஆல்ஸ்டோம் நிறு வனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொதுமேலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணி யாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங் களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்பட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் படி, முதல் மெட்ரோ ரயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படும். அதைத் தொடர்ந்து 14 மாதங் களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். ஆல்ஸ்டோம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி ஒப்பந்தமாகும். முதல் இரண்டு ஒப்பந்தங்கள் முன்பே வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.