tamilnadu

img

கூடலூரில் தொடர் மழை: பாக்கு, வாழை மரங்கள் சேதம்

ஊட்டி, செப்.13- நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து  வருகிறது. இதனால், அப்பகுதி களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. இதுதவிர மின் கம்பங்களின் மீது விழுவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். பலத்த மழையால் நீர்நிலைக ளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து  உள்ளது. தொடர் பலத்த மழை யால் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை  ஊராட்சிக்கு உட்பட்ட குற்றி முற்றி பகுதி ஆற்றில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இத னால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வாழை, பாக்கு மற்றும் பயிர்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பந்தலூர் தாலுகாவில் பெய்த மழைக்கு பொன்னானி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பந்தலூர் அருகே இரும்பு பாலம் பகுதியில் வீரம்மாள் என்ப வரது வீட்டின் சுவர், மேற்கூரை இடிந்து விழுந்தது. இதை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே தப்பி ஓடியதால் காயம் இன்றி உயிர் தப்பினர். தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

;