சென்னை,ஏப்.20- தமிழ்நாடு சட்டப் பேரவையில் வியாழனன்று (ஏப்.20) தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பொது அமைதியை பராமரிப்பது சட்டங்களை அமல்படுத் துவது அவசரகாலங்களில் உதவுவது குற்றங்களை கண்டுபிடிப்பது மற்றும் சொத்துக்களை பாது காப்பது ஆகியவை காவல்துறையின் இன்றி யமையாத பணிகளாகும்” என்றார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் மத நல்லிணக்கத்தை பாது காக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால், மாநிலத்தில் எந்த ஒரு பெரிய அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை என்றும் கூறினார். மாநிலத்தில் சில இடங்களில் வழிபாட்டு உரிமை கோரியும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்க அனுமதி வேண்டியும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டங்கள் நடத்திய போதிலும் அந்த போராட் டங்களில் வன்முறைக்கு இடம் தராத வகையிலும் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையிலும் அவற்றை காவல்துறை திறமையாக கையாண்டது. பல்வேறு பிரச்சனை களை முன்னிறுத்தி அரசி யல் கட்சிகள் போராட்டங் கள் நடத்திய போது தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.