tamilnadu

img

மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்கள்

சென்னை, ஆக.4- முன்னுரிமை திட்டங்கள்  குறித்து தலைமை செய லகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தமிழ்நாட்டில் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத் தப்படவுள்ளது.  மக்கள் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் மாதம் ஒருமுறை சம்பந்தப்பட்ட துறைகள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங் கிய கூட்டத்தை கூட்டி ஒவ்வொரு திட்டங்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் வெள்ளிக்கிழமை (ஆக.4) சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட ரங்கில் முன்னுரிமை திட்டங் கள் குறித்து ஆய்வு நடத் தினார். அமைச்சர்கள் கே. என்.நேரு, ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், முத்து சாமி, தா.மோ. அன்பர சன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப் பன், கயல்விழி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் பல் வேறு துறைகளின் செய லாளர்கள், நிர்வாக இயக்கு நர்கள் பங்கேற்றனர். அரசு செயல்படுத்தி வரும் ஒவ்வொரு திட்டங்க ளின் தற்போதைய நிலை எந்த அளவில் உள்ளது என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு திட்டங்களின் செயல்பாடுகள் மாவட்டந் தோறும் எவ்வாறு செயல் படுத்தப்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு மக்களிடம் சென்றடைந்துள்ளது என்பதை கள ஆய்வு மேற் கொள்ள வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.