“சட்டப்பூர்வமாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக ஆயுள் தண்டனையாக வழங்கலாமே ஓழிய, மரண தண்டனை வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பொதுவாக என்கவுண்ட்டர் கூடாது என்பது எங்களது கருத்து. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி எனச் சொல்லக் கூடியவர் என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், பொதுவாக என்கவுண்ட்டர் கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு!” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.