தோழர் பா.வீராசாமி படத்திறப்பு, புகழஞ்சலி கூட்டம்
திருச்சி, ஜுன் 23- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், திருச்சி புறநகர் மாவட்டக்குழு உறுப்பினரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கொடியின் துணையோடு மக்கள் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்தி உரிமைகள் பெற்று தந்த புலிவலம் தோழர் பா.வீராசாமியின் படத்திறப்பு, புகழஞ்சலி கூட்டம், முசிறி ஒன்றியம் புலிவலம் கடைவீதியில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எஸ். அசோக் தலைமையில் நடைபெற்றது. காஜா மொய்தீன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், தோழர் வீராசாமி படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அ. பழநிசாமி, மாவட்டச் செயலாளர் ஜெ. சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், சிபிஐஎம் மூத்த தலைவர் நல்லுசாமி, மாவட்ட தலைவர் எஸ்.தெய்வநிதி, திமுக ஒன்றிய துணைச் செயலாளர் நஜீப், அஇஅதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் கிருபாகரன், சமூக ஆர்வலர் நந்தா, ஜே.எப்.கல்வி நிறுவனம் தாளாளர் முகமது ஜின்னா, அஇவிதொச மாவட்ட துணைத் தலைவர் வீர விஜயன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் சத்தியராஜ் ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர். நிகழ்வில், வீராசாமியின் மனைவி புஷ்பராணி, மகன் விஜய் பிரபாகரன், மகள் வினோதினி உள்ளிட்ட ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர். எம்.பி. முத்துக்குமார் நன்றியுரையாற்றினார்.