மதுரை, அக். 28- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒரு வரும் மேடை கலைவாணர் என்று அழைக் கப்பட்டவருமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தோழர் என்.நன்மாறன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, பொதுமக்கள் படிப்பக திறப்பு விழா மற்றும் வீரவணக்க நிகழ்ச்சி சனிக் கிழமை அன்று மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கே. அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரிட்டோ, ஷப்னம், சம்சு பீவி முன்னிலை வகித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் படிப்பகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள், மாவட்டச் செயலாளர் என்.கணேசமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் எம்.ஜான்சன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ.லியாகத் அலி, அருட் தந்தையர்கள் ஜெ.பெனடிக் பர்ணபாஸ், பால் பிரிட்டோ, அருள், லாரன்ஸ், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் டி.ஜான் மைக்கேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,
எம்.ராமகிருஷ்ணன்
அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் பேசுகையில், ‘‘சோசலி சத்தை பற்றி மிக எளிமையாக தோழர் நன்மாறனை விட யாரும் சொல்லி விட முடியாது. அப்படி மக்களுக்கு புரியக்கூடிய வகையில், சொல்லக்கூடியவர் தான் தோழர் நன்மாறன். இன்றைக்கு இந்த நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலைக்கு தோழர் நன் மாறன் போன்றவர்கள் தேவைப்படுகி றார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு மக்கள் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையை யும் வலியுறுத்தி அவர் உருவாக்கியது தான் இந்த சிறுபான்மை மக்கள் நலக்குழு. இன்றைக்கு மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி அனைத்து சிறுபான்மை மக்களை யும் ஒன்றிணைத்து போராடிக் கொண்டிருக் கின்றது. நமக்கு கூர்மையான எதிரி யார் என்பதை நாம் தெரிந்து கொண்டு போராட வேண்டும். அந்த வகையில் வரும் 2024 தேர்தலில் பாசிச ஆட்சியை ஒழிக்க நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று தோழர் நன்மாறன் நினைவு நாளில் உறுதி ஏற்போம்’’ என்று பேசினார்.
வெறுப்பு அரசியலை வேரறுப்போம்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நிறைவு செய்து பேசுகை யில், ‘‘தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு அமைப்பதற்கு தோழர் லியாகத் அலி, நன்மாறன் போன்றவர்கள் மிகப்பெரும் பங்கினை ஆற்றியுள்ளார்கள். அந்த வகை யில் சிறுபான்மை மக்களை ஒன்றிணைத்து அதற்கு ஒரு முகத்தை கொடுத்தவர் தோழர் நன்மாறன். ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் என்றால் வெள்ளை அங்கி அணிந்தவர்கள் ஒதுங்கி நிற்பார்கள். அந்த வகையில் நம்முடைய பொது எதிரி யார் என்பதை நாம் தெரிந்து கொண்டு இன்றைக்கு நாம் அனைவரும் ஒன்றிணை ந்து நிற்கின்றோம். இதற்கு முக்கியமான பங்கு என்பது தோழர் நன்மாறன் அவர்க ளுக்கு உள்ளது. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அதேபோல் மதுரை யில் உள்ள வரலாற்று நாயகர்களை நினைவு படுத்திக் கொண்டே இருப்பார். அப்படித்தான் வைக்கம் போராட்டத்தில் பங்கு எடுத்த பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார். அந்த வகை யில் இன்றைக்கு இருக்கக்கூடிய வெறுப்பு அரசியலை வேரறுப்போம் அதுதான் தோழர் நன்மாறன் அவர்களுக்கு நாம் செலுத்தக் கூடிய புகழஞ்சலியாக இருக்கும்’’ என்று பேசினார்.
தலைவர்கள் பேசுகையில், ‘‘தோழர் நன் மாறன் என்றைக்கும் எளிமையானவர், மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த வர். தனக்கோ தன் குடும்பத்திற்கோ உதவி களை அவர் யாரிடமும் கேட்டதில்லை. பிற ருக்கு உதவி கேட்டு வருவது மட்டுமே அவரு டைய வழக்கமாக இருந்தது. இதுதான் அவருடைய எளிமைக்கு எடுத்துக்காட்டு. மார்க்சும் மூலதனமும் எப்படி இந்த மண்ணில் இருந்து பிரிக்க முடியாதோ அதேபோல் எளிமை நேர்மை என்பதற்கு எடுத்துக்காட்டு தோழர் நன்மாறன். இந்த மதுரை மண் இருக்கும் வரை அவருடைய எளிமை நேர்மை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கும்’’ என்று பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு அலுவல கத்தில் நடைபெற்ற தோழர் நன்மாறன் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் மாநி லச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், க.சுவாமிநாதன் ஆகி யோர் புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேற்கு - 1ஆம் பகுதிக் குழு சார்பில் பெத் தானியாபுரம் அண்ணா மெயின் பாஸ்டின் நகரில் தோழர் நன்மாறன் வசித்த இல்லம் அருகில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதி சிபிஎம் தோழர்கள் நன் மாறன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.