இலங்கை தமிழர் முகாம்களில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம்
சென்னை, ஏப்.30 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், “சிறுபான்மை யினர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்த மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற் காகவும் பல்வேறு நலத்திட்டங்களையும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் சீரிய முறையில் சிறப்பாக செய்து வரு கிறது. மேலும், சிறுபான்மையினர் பாது காப்பிற்காகவும் அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பல நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உறுதிபூண்டியிருக்கிறது” என்றார். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூ.65 கோடி யில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்களுக் கான கபர்ஸ்தான் மாவட்டத் தலைநகரங்க ளில் அமைத்து தர உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர் முகாம்களில் ரூ.49,87,500 மதிப்பீட்டில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம் அமைக் கப்படும். அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி கொண்ட செல் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி இறுதியாண்டு முடித்தவர்களுக்கு உலகளாவிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரும் நோக்கத்தை வழிநடத்த தமிழ்நாடு திறன் இன்டர் நேஷனல் நிறுவப்படும். வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று, இறந்த வறிய நிலையில் உள்ள அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சென்னை, திருநெல்வேலி, கரூர், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கூடுத லாக தலா ஒரு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் திருநெல்வேலி, விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் கூடுத லாக தலா ஒரு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் புதிதாக தொடங்கப்படும். கல்லறைத் தோட்டங்களில் பழுதடைந்த சுற்றுச்சுவர் களை சீரமைத்தல், புதிதாக சுற்றுச்சுவர் அமைத்தல், பாதைகளை புனரமைக்க முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடு களில் பட்டமேற்படிப்பு மேற்கொள்ள கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். புத்த, சமண மற்றும் சீக்கிய மக்களின் புனித பயணத்திற்கு மானிய உதவி வழங்கப்படும். வக்ஃப் சொத்துக்கள் நில அளவை பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக 20 உரிமம் பெற்ற நில அளவை யர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.