tamilnadu

img

சென்னை-புதுச்சேரி கப்பல் போக்குவரத்து தொடக்கம்

சென்னை, பிப். 27- சென்னை – புதுச்சேரி வர்த்தக சரக்கு  போக்குவரத்து கப்பல் திங்கட்கிழமை (பிப். 27) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை துறைமுகம்  தலைவர் சுனில் பாலிவால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து  ஏற்றுமதி செய்ய ஏதுவாக புதுச்சேரி  துறைமுகத்திற்கு சரக்கு பெட்டகங் களை கொண்டு சென்று அங்கிருந்து சிறிய சரக்கு கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகம் கொண்டு வந்து  வெளிநாடுகளுக்கு பெரிய கப்பல்களில்  கொண்டு செல்ல இந்த போக்குவரத்து பயன்படும். அதேபோல் இறக்குமதியாகும் சரக்கு பெட்டகங்களை தமிழ்நாட்டிற் குள் கொண்டு செல்லவும் இந்த போக்கு வரத்தை பயன்படுத்த உள்ளனர். மதுர வாயில் ஈரடுக்கு மேம்பால பணிகள்  தொய்வில் உள்ளதால் இது ஒரு வகை யான மாற்று வழி என கூறப்படுகி றது.

புதுச்சேரி துறைமுகம், கடந்த  ஐந்தாண்டுகளில் ஐந்து மீட்டர் ஆழத்திற்கு கடல் ஆழப்படுத்தப்பட்டதன் மூலம் இச்சேவை சாத்தியமானது. சென்னை துறைமுகம் பெரிய கப்பல்கள் இயக்க ஏதுவாக 16 மீட்டர் ஆழம் கொண்ட துறைமுகமாக உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சே ரிக்கு சரக்கு கப்பல் 8 மணி நேரத்தி லிருந்து 10 மணி நேரத்திற்குள் சென்றடையும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த போக்குவரத்து இயக்கப்பட உள்ளது. முன்னதாக சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை மற்றும் புதுச்சேரி இடையில்  சரக்கு பெட்டக சேவை திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சரக்கு பெட்டகங்களை எடுத்துச்  செல்ல போக்குவரத்து சேவை பணிகள்  முடிக்கப்பட்டு சேவை தொடங்கப் படுகிறது என்று தெரிவித்தார். திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களாக உள்ளன. சரக்கு பெட்டகங்கள் புதுச்சேரிக்கு கொண்டு செல்வதன் மூலம் நேரம் மற்றும் மாசு குறைக்கப்படுகிறது என்றும்  அவர் கூறினார்.