tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுடன்  கலந்துரையாடிய ஆட்சியர்

நாகர்கோவில்,ஜூன் 6- கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட புத்தேரி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, ஜூன் 6 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை  உணவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மற்றும் மாணவர்கள் விருப்பத்துடன் உணவை உட்கொள்கிறார்களா உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மிகவும் தரமானதாக தயாரிக்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளில், மாணவர்களின் விருப்பமான உணவு எது என்பதை மாணவர்களிடம் கேட்டறியப்பட்டது என்று கூறினார்.     இதில் புத்தேரி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

குமரி மாவட்ட  கோயில்களில்  திருடிய நபர் கைது

குழித்துறை,ஜூன் 6- குமரி மாவட்டத்தில் கோயில்களின் திருடிய பிரபல திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.  மார்த்தாண்டம் அருகே நட்டாலம் மகாதேவர் கோயிலில் கடந்த வாரம் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது .இதைப்போன்று பல்வேறு கோவில்களில் தொடர்ந்து திருட்டுச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவம் அறிவுரையின் பேரில் காவல்  சார்பு ஆய்வாளர் இந்துசூடன், ஜாண்போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மார்த்தாண்டத்தில் ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில்,  மேல கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்த அன்பரசு (வயது 31) என்பதும் நட்டாலம் சிவன் கோயில், தக்கலை பிளாங்காலை கோயில், குன்னம்பாறை கோயில் உட்பட பல்வேறு கோயில்களில்  திருடியதும் தெரியவந்தது.  அவரிடமிருந்து சூலாயுதம், விளக்கு, தங்க பொட்டு, ரூ. 9 ஆயிரம் சில்லரை நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் உதய ரேகை வேளாங்கண்ணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஜுன் 13-இல் மீனவர்  குறைதீர் கூட்டம்

இராமநாதபுரம்,ஜூன் 6- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் குறை தீர்க்கும் கூட்டம் ஜுன் 13 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால், இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக  அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இணையர்கள்  இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்கலாம் அறநிலையத் துறை அழைப்பு

கும்பகோணம், ஜுன் 6-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவிலில், இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, பொரு ளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோவில் மூலம் 4 கிராம் தங்கத்தாலி மற்றும் சீர்வரிசைகள் வழங்கி, வருகிற 2025 ஜூலை 2 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று திருமணங்கள் நடத்தப்பட உள்ளன.  இத்திட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோ வில் அலுவலகத்திற்கு நேரில் சென்று விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை

தஞ்சாவூர், ஜுன் 6-   தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்ச ரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,  உழவர் பாதுகாப்புத்திட்ட அட்டை (மெரூன்  நிறம்) வைத்துள்ள நபர், இயற்கையாக மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தின ருக்கு இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை ரூ.20,000 மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2500  சேர்த்து ரூ.22,500 வழங்கப்படும்.  இதில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை  ரூ.2,500 தொடர்புடைய, பஞ்சாயத்து மூலம் அளிக்கப்பட்டிருப்பின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக உள்ள நபரின் இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை ரூ.20,000 மட்டுமே வழங்கப்படும்.    எனவே, முதலமைச்சரின் உழவர் பாது காப்புத் திட்டத்தின் கீழ், இயற்கை மரணம்  மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை,  கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, விபத்து நிவாரண உதவித் தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூ தியம் மற்றும் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தை களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள்  வழங்கப்படுகிறது.  இதனை பெறுவதற்கு, நிகழ்வு நடை பெற்ற நாளிலிருந்து 6 மாதத்திற்குள் உரிய  ஆவணங்களுடன், தொடர்புடைய கிராம  நிர்வாக அலுவலர் மற்றும் தனி வட்டாட்சி யர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  மேலும், தவிர்க்க இயலாத மற்றும் அறியாமையின் காரணங்களினால் கால தாமதமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்க ளுக்கும் உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற  பிறகு, பயன்பெற இயலும். காலதாமத காலம் அதிகபட்சம் 1 ½ வருடம் வரை.  எனவே, மேற்கண்டவாறு முதல மைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர், ஜுன் 6-  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத் தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக் கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில்  பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரம்பலூர், அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டல் மையங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.06.2025 (சனிக்கிழமை) அன்று  மேலமாத்தூர், இராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி, வளாகத்தில் காலை 8 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூர் தனியார்துறை நிறுவனங்கள், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 13.06.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்களது நிறுவனத்தை private job portal-ல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.  மேலும் விவரங்களுக்கு E-Mail-deoperambalur@gmail.com என்ற மின் னஞ்சல் முகவரியிலோ அல்லது 94990 55913  என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.