சின்னாளபட்டி, ஜன.11- திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம சுகா தார நிறுவன இயக்குனரின் ஊழல் மற்றும் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடி யு ஆத்தூர் வட்டார ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அம்பாத்துரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்திகிராம கிராமிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை இயக்குனரின் ஊழல் பண மோசடி மீது ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறக்கட்டளை நிறுவன விதிகளுக்கு மாறாக பணியில் இருக்கும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . நிறுவன ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அறக்கட்டளை இயக்குனர் விதியை மீறி எடுத்த பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கன்வீனர் வி.கே. முருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் கே.ஆர் கணேசன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ், ஓய்வுபெற்ற பணியாளர் ராஜ பெருமாள், சுரேஷ் மணி, பாலமுருகன், பிரபாகரன், முரு கேசன் ஆகியோர் பேசினர்.