தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
தஞ்சாவூர், மே 7- தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடி யேற்றத்துடன் கடந்த ஏப்.23 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையிலும், மாலை யிலும் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், 15 ஆம் நாளான புதன் கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்க ஜம், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் இரா.இராஜாராம், மாநக ராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க. கண்ணன், தஞ்சாவூர் அரண் மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டனர்.