tamilnadu

img

சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராக சின்னை.பாண்டியன் தேர்வு

தஞ்சாவூர், டிச.19-- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் 23 ஆவது மாவட்ட மாநாடு, தோழர் கோ.வீரய்யன் நினை வரங்கில் சனி, ஞாயிறு 2 தினங்கள் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் ராமலிங்கம் பேசினார். மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் தாக்கல் செய்த வேலையறிக்கையை தொட ர்ந்து, சனிக்கிழமை மாலை பிரதிநிதிகள் விவாதம் நடை பெற்றது.

புதிய மாவட்டக்குழு

கட்சியின் மாவட்டச் செய லாளராக சின்னை.பாண்டி யன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், கே.பக்கிரி சாமி, சி.ஜெயபால், பி.செந்தில் குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ். தமிழ்செல்வி, கே.அருளர சன், எம்.செல்வம், என்.சிவ குரு, ஆர்.கலைச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்கள் உட்பட  41 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத் நிறைவுரையாற்றி னார்.