அக்.20-24 வரை காலையில் மெட்ரோ ரயில் இயக்கத்தில் மாற்றம்
சென்னை, அக்.18- தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக அக்டோபர் 20 முதல் 24ந் தேதி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேர இடைவெளியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பச்சை வழித்தடத்திலும் நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. பாது காப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி அவசியம். அக்.20 முதல் 24 வரை காலை 5 மணி முதல் 6:30 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை 7 நிமிட இடை வெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6:30 மணிக்குப் பிறகு ரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இன்றி இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித் தடம் மற்றும் நீல வழித் தடங்களில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். பய ணிகள் தங்களது பய ணத்தை அதற்கேற்ப திட்ட மிட்டுக்கொள்ள வேண்டும் என்றும், மெட்ரோ ரயில் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
