tamilnadu

வெறிநாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகள்

நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் கால்நடைகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுவிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதி கரித்து வருகிறது. குறிப்பாக கிராமப் புறங்களில் விவசாயிகளின் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை நாய்கள் கடிப்ப தால், கால்நடைகள் இறந்து வரு கின்றன. தெருநாய்கள் கடித்து உயிரிழந்த  கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டை  இதுவரை மாநில அரசு வழங்க வில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு  இடங்களில் தெருநாய்கள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழி கள், மாடுகள் உயிரிழந்துள்ள

குறிப்பாக திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக் கான ஆடுகள், நாய்கள் கடித்ததில் இறந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப் பட்ட விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் நீதி மன்ற வழக்கை காரணம் காட்டி எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சரியானதல்ல.  நீதிமன்றத்தில் ப்ளூகிராஸ் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தெருநாய்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.  உள்ளாட்சி அமைப்புகள் உரிய சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக தெருநாய்கள் பெருகியுள்ளன. 

விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கக் கூடிய ஆடுகள், கன்று களை நாய்கள் பட்டிகளில் புகுந்து கடித்துக் கொல்கிற சம்பவம் திருப்பூர்,  ஈரோடு மாவட்டப் பகுதிகளில் நடந்து  வருகிறது. ஈரோடு மாவட்டம் பெருந் துறை தாலுகா சென்னிமலை அருகில் உள்ள ராமலிங்கபுரத்தில் ஒரு விவசாயி யின் 30 ஆடுகள், நாய்களால் கடித்து கொல்லப்பட்டுள்ளன. சிவன்மலை அருகில் 5 ஆடுகளும், தாராபுரத்தில் 5  ஆடுகளும் உயிரிழந்துவிட்டன.  திருப்பூர் மாவட்டத்தில், காங்கே யம், ஊத்துக்குளி, தாராபுரம், பல்லடம் வட்டங்களிலும், ஈரோடு மாவட் டத்தில் பெருந்துறை தாலுகாவிலும் தெருநாய்கள் அட்டூழியம் தொடர் கதையாக உள்ளது.

இதுவரை 600- க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந் துள்ளன. இந்நிலையில், காங்கேயம்-பெருந்துறை மாநில நெடுஞ்சாலை யில் பாரவலசு என்ற இடத்தில் பிப்.13 முதல் தொடர் போராட்டம் நடைபெற்று  வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயக் குடும்பப் பெண்கள், இறந்த ஆடுகளை சாலை யில் போட்டு மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரும்,  காங்கேயம், தாராபுரம் வட்டாட்சி யர்களும் இழப்பீட்டுக்கான பரிந்துரை கள் அரசுக்கு அனுப்பப்படும் எனவும், நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுத்து மூலமாக உறுதி யளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். உயிரிழந்த கால்நடை களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க  வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.