பல்லடம் ஆய்வாளரின் நீதிமன்ற அவமதிப்பு!
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நவீன் மனைவி ஐஸ்வர்யா (19) சாதி ஆணவப்படுகொலையில் தொடர்புடைய நபர்கள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்குப் பதிவு செய்வதுடன், பல்லடம் காவல்துறை ஆய்வாளரின் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்த பெரு மாள், ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (19) ஆவார். அருகில் உள்ள பூவாளூரில் வசிக்கும் பட்டி யலினத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). டிப்ளமோ மெக்கானிக் கல் இன்ஜினியரிங் படித்தவர். ஐஸ்வர்யாவும், நவீனும் திருப் பூரில் வேலைசெய்து கொண்டி ருந்த நிலையில் காதலித்து டிசம் பர் 31 அன்று திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு பல்லடத்தில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசா ரித்த பல்லடம் காவல்துறை 18 வயது பூர்த்தி அடைந்துள்ள ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாகவும், சட்ட விரோதமாக வும் ஜனவரி 2 அன்று வலுக்கட்டாய மாகத் தம்பதிகளைப் பிரித்து பெற்றோருடன் அனுப்பியுள்ள னர். இந்நிலையில் ஐஸ்வர்யா தற் கொலை செய்து கொண்டதாகக் கூறி அடுத்த நாள் (03.01.2024) அதி காலையில் அவசர அவசரமாக அவ ரது உடலை எரித்துள்ளனர். நவீன் அளித்த புகாரின் அடிப்ப டையில் ஐஸ்வர்யாவின் பெற் றோர்கள் பெருமாள் மற்றும் ரோஜா கைது செய்யப்பட்டு உள்ளனர். சாதிய பாகுபாடு காரணமா கவே கொலை நடைபெற்றுள்ளதா லும், இதனால் இணையரை இழந் தவர் பட்டியலினத்தவர் என்பதா லும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். பல்லடம் காவல் நிலைய ஆய் வளர் முருகையன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதி ராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அதுவரை சாதி மறுப்புத் திருமண தம்பதிகளைப் பாதுகாப்பதற்கு வழங்கிய வழிகாட்டுதல்களில் ஒன்றான “சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் எந்த காவல் நிலையத்தில் விசா ரிக்கப்படுகிறார்களோ, அந்தக் காவல்நிலையமே தம்பதிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு என்பது பல்லடம் காவல்நிலைய ஆய்வாள ரால் மீறப்பட்டுள்ளது. இது நீதி மன்ற அவமதிப்பாகும். அதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும் என்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்துகிறது.