சிஐடியு சங்கம் -எங்கள் சிஐடியு சங்கம். தொழிலாளிக்கு தோள் கொடுக்கும் சிங்கம்
! (சிஐடியு)
இமய மகாமலை மேலே ஏற்றிய செஞ்சுடர்த் தீபம்! தியாகிகள் குருதியினாலே தீட்டிய சித்திர மாகும்! இதுதான் இதுதான் எம் சங்கம்! எமதுயிர் எமதுடல் அதன் அங்கம்! எரிமலைக் குமுறலைப் போல நித்தம் பொங்கும்! இந்திய விடியலை எழுதும் தேசம் எங்கும்!
(சிஐடியு)
இரண்டாம் சுதந்திர வேள்வி நெருப்பினை ஏந்திய சங்கம்! ஏகாதிபத்தியச் சிதைக்கு நெருப்பினை வைத்திடும் சங்கம்! தேசம் செல்லும் திசை அறிந்து காட்டுது பார் நம் கொடி அசைந்து! பார் நம் புரட்சியின் நாடித்துடிப்பு போலே பட பட எனக் கொடி பறக்கும் கம்பம் மேலே!
(சிஐடியு)
நாளை இந்தியா நமதே சங்கு முழங்குது சங்கம்! நம் ஜெய கோஷம் கேட்டு அஞ்சும் ஆள்பவர் நெஞ்சம்! ஆல் போல் சங்க நிழல் படரும்! அதன் கீழ் அமர்ந்தால் மனம் குளிரும்! நாம் செல்லும் பாதையில் நட்சத்திரம் பின் தொடரும்! நம் முக ஜோதியில் மங்கிடும் சூரியச் சுடரும்!
(சிஐடியு)