tamilnadu

img

தருமபுரி: விவசாயிகள் கூடிய அரசு விழாவில் தங்கள் அமைப்புக்கு உறுப்பினர் சேர்த்த பாஜக

தருமபுரி, மே 28- பாப்பாரப்பட்டியில் அரசு  சார்பில் நடைபெற்ற சிறுதானிய திரு விழாவில் கூடிய விவசாயிகளை, தங்களது விவசாய அமைப்பிற்கு உறுப்பினர் சேர்க்கை நடத்திய பாஜகவினருக்கு எதிராக கண்ட னங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்க லைக்கழகம் வேளாண்மை அறிவி யல் நிலையம் மற்றும்  வேளாண்மை உழவர் நலத்துறை இணைந்து மண்  டல அளவிலான சர்வதேச சிறு தானிய ஆண்டு திருவிழா, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளா ண்மை அறிவியல் நிலைய வளா கத்தில் ஞாயிறன்று துவங்கியது. இத்திருவிழா திங்களன்றும் நடை பெற உள்ளது. துவக்க நிகழ்ச்சியானது தமிழ்  நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு, கண்காட்சியை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமையமூர்த்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள், அரசுத்துறை அலுவ லர்கள், ஆயிரக்கணக்கான விவ சாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறு தானிய உற்பத்தி பெருக்கம், சந்  தைப்படுத்துதல், இயற்கை விவ சாயம் தொடர்பாக 75 விழிப்பு ணர்வு கண்காட்சி அரங்குகள் நிறு வப்பட்டுள்ளன.

அரசு சார்பில் பல  அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தா லும், அரங்கு எண் 47 இல் பாரதிய ஜனதா கட்சியின், தமிழ்நாடு பார திய கிசான் சங்கம் 2021 - 2024  ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்  கைக்கான அரங்கம் அமைக்கப் பட்டிருந்தது. இந்த அரங்கத்தில் அமர்ந்து பலர் பாஜக விவசாய அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை  படிவத்தை, கண்காட்சி அரங்கத்தை  பார்வையிட வந்த பொதுமக்க ளுக்கு வழங்கி உறுப்பினராக்கும் வேலையில் ஈடுபட்டனர். அரசுத்துறை சார்பில் நடை பெறும் வேளாண் திருவிழாவில், பாஜகவின் அமைப்பிற்கு உறுப்பி னர் சேர்க்கைக்கு அரங்கம் அமைக்க அனுமதி அளித்தது அரசு விதி களுக்கு புறம்பானது என பொது மக்களும், அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மண்டல அளவி லான சர்வதேச சிறுதானிய திரு விழாவில் ஒரு கட்சியின் துணை  அமைப்பின் உறுப்பினர் சேர்க் கைக்கு வேளாண்மை அறிவியல் நிலையம் அனுமதி அளித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வேளாண் விஞ்ஞானி களே தேவையில்லை; இயற்கை  அனுபவசாலிகளே போதும் என்று  அறிவியலுக்குப் புறம்பாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் மேற்கொள் வதற்கு, அரசு செலவு செய்து ஆட்களை திரட்டி தருகிறதா? அப்படி என்றால் ஆராய்ச்சிகள் எதற்கு? ஆராய்ச்சிக் கூடங்கள் எதற்கு? லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் விஞ்ஞானிகளை எதற்கு பணியமர்த்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்ளி எழுப்பி உள்ளனர்.