முதலமைச்சர் வரவேற்பு
சென்னை: நகைக் கடைகளுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்தி ருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், நிதி அமைச்சகத்திற்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கை யாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக் கிறார்.
ராமதாஸ் - அன்புமணி மோதலில் பாஜகவுக்கும் தொடர்பில்லையாம்!
திருநெல்வேலி: “2024 மக்களவைத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்து விட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப் பட்டது. பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராம தாஸ் ஆகியோருக்கு இடையிலான மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும், பின்னணியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர் களின் உட்கட்சி பிரச்சனை. உட்கட்சி பிரச்சனைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது” என்று நழுவினார்.
வைகோ சகோதரி மறைவு
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத் தில் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 1 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதி களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் சங்கம் ஆதரவு
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கமல் ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்ட ஒரு சிலர், தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு தவறான புரிதலை பரப்புகின்றனர். அதனால், தேவையற்ற சங்கடமான சூழல், பதற்றம் ஏற்படுகிறது. இந்திய மொழிகள் அனைத்திற் கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர் நடிகர் கமல்” என்று அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
நீர்வரத்து சரிவு
சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4,927 கனஅடியில் இருந்து 3,248 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.29 அடியாக உள்ளது; நீர் இருப்பு 81.70 டிஎம்சி யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது.
உலகத் தர கட்டமைப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலாத் தலங்களின் கட்ட மைப்புகளை உலக தரத்தில் மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந் திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.