கோத்தகிரி, பிப்.12- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி யில் மக்கள் கூடும் முக்கியமான பகுதி களில் கடந்த சில நாட்களாக 4 காட்டெரு மைகள் சேர்ந்த கூட்டம் ஒன்று பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத் தும் விதமாக வலம் வருகிறது. வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணி களை போன்று இவைகள் சாலைகளில் சுற்றி திரிவது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையில் காலை நேரத்தில் 4 காட்டெருமைகள் உலா வந்தன. இத னால் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் என யாரும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து நீண்ட நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து காட்டெருமைகள் கூட்டம் நகர்ந்து சென்ற பின்பு போக்குவரத்து சீரானது. எனவே காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.