கும்பகோணம், நவ.14- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவில் ஆதீனம், 18 சைவ மடங்களில் ஒன்றா கும். 14 ஆம் நூற்றாண்டு முதல் சூரி யனார்கோவில் ஆதீன மடம் இயங்கி வருகிறது. இதன் 28 ஆவது ஆதீனமாக இருந்து வந்த மகாலிங்க தேசிக பரமா சாரிய சுவாமிகள் திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவியது. இந்நிலை யில், பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்கும் ஆதீனம், திருமணம் செய்து கொண்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவிடை மருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ் முன்னி லையில், பொதுமக்கள் ஆதீனத்தை அங்கிருந்து வெளியேற்றி, மடத்திற்கு பூட்டு போட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆதீன மடத்தின் சாவியை இந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் வட்டாட்சியர் பாக்கியராஜ் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை மூலம் மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சிவாச்சாரியார் ஒருவர் காலையில் மடத்திற்கு வந்து வழக்கமாக நடைபெறும் பூஜைகளை செய்த பிறகு, மடம் மீண்டும் பூட்டப்பட்டது. மடத்தின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.