பிற மாவட்ட ஆட்டோக்களை அனுமதிக்கக் கூடாது!
ஆட்டோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மே.18- பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் வட்டம், அகரம் சீகூரில் ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாண்டு தலைவர் சந்திரகாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் கண்டன உரை ஆற்றினார். சிஐடியு ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் ரங்கநாதன், மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் தீனதயாளன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், அகரம்சீகூர் பகுதியில் வெளி மாவட்ட ஆட்டோக்களை தடுத்து நிறுத்திட வேண்டும். அகரம் சீகூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரக்கூடிய நிழற்குடை மற்றும் கழிவறை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.