சென்னை, ஏப்.27- அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று காத்தி ருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.டெய்சி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட் சம் ரூபாயும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்குவது போன்று ஒரு வருட மகப்பேறு விடு முறை தர வேண்டும். குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சல் மற்றும் வெப்பத்தை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடு முறை வழங்க வேண்டும். சிலிண்டருக்கான முழுத் தொகையையும் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10 ஆண்டு களாக பணியாற்றி வரும் உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். குறு மையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வு பெறும் ஊழி யர்களுக்கு ஒரு சம்பள உயர்வு (இன்கிரி மென்ட்) கூடுதலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் ஐசிடிஎஸ் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது. கடுமையான வெயில், ஒருசில இடங்களில் மழை, இதனையும் மீறி, போதிய பாதுகாப்பு இல்லாத சூழலிலும் இரவில் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில், சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இதனை யடுத்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிப்ரவரி 26 அன்று தூத்துக்குடியில், சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரத்தின மாலா, பொதுச்செயலாளர் பி.டெய்சி, பொருளா ளர் எஸ்.தேவமணி, துணைத் தலைவர் ஹேமப் பிரியா, சிஐடியு மாநில துணைப் பொதுச்செய லாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் ஆர். ரசல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். இந்த பேச்சுவார்த்தை குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டெய்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் அறிவுறுத்த லின்படி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மே மாதம் கோடை விடுமுறை வழங்குவது மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகிய கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டே கோடை விடு முறை வழங்குவது குறித்து முதலமைச்சரு டன் பேசி உறுதி செய்யப்படும். காலிப் பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து உரிய உத்தரவு பிறப் பிக்கப்படும். இதர கோரிக்கைகள் குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எனவே, ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்குத் திரும்ப அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இதனையேற்று போராட்டம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, ஏப்ரல் 27 முதல் ஊழியர்களும், உதவியாளர்களும் பணிக்குத் திரும்பினர் என்று கூறப்பட்டுள்ளது.