கல்பற்றா, டிச.3- வயநாடு மாவட்டம் மேப்பாடி பாலி டெக்னிக் கல்லூரி மாணவியும் எஸ்எப்ஐ மாவட்ட துணைத் தலைவ ருமான அபர்ணா கவுரியை படு கொலை செய்ய யுடிஎஸ்எப் என் கிற போதைப்பொருள் கும்பல் திட்ட மிட்டு தாக்குதல் நடத்தியது. தமது சக தோழரின் உயிரைக் காப்பாற்ற எஸ்.எப்.ஐ.யினர் விரைந்தனர். எனி னும் அபர்ணா கொடூரமாக தாக்கப் பட்டார். எஸ்எப்ஐ பெண் தலைவியை கல்லூரியின் போதைப்பொருள் கும்ப லான டிராபியோக் (Trabiok) மற்றும் யுடிஎஸ்எப் (UDSF) இணைந்து எஸ்எப்ஐ தலைவரை கொல்ல முயன்றனர். சுமார் 30 பேர் கொண்ட கும்பல் அபர்ணாவை பெண் என்று கூட பாராமல் அடித்து துவட்டி எடுத் தது. அபர்ணா தனியாக அமர்ந்திருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. அவ ரைக் கொல்ல, அவர் தலைமுடியை சுவரில் பொருத்தி, ஒரு தடியால் அடித் தனர். பின்னர் அவரை ஒரு உயரமான சுவரில் இருந்து கீழே தள்ளினர்.
எஸ்எப்ஐ ஊழியர்கள் ஓடி வந்து அபர்ணாவைக் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அபர்ணா மயக்கமடைந்தார். போதைப்பொருள் கும்பலுடன் யுடிஎஸ்எப் குண்டர்களும் வெறி யாட்டம் நடத்தினர். மாணவர் சங்க தேர்தலின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக எஸ்எப்ஐ பிரச்சாரம் செய்தது. அபர்ணா கல்லூரி யில் எஸ்எப்ஐ அமைப் பின் பொறுப்பா ளராக இருந்தார். போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் மாணவர்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை எஸ்எப்ஐ நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதி யாக அபர்ணா தலைமையில் மேப் பாடி பாலிடெக்னிக்கில் தீவிர நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் போதைப்பொருள் கும்பலுடன் யுடிஎஸ்எப் அமைப்பினர் இணைந்து, அபர்ணாவை குறிவைத்தனர். “டிராபியோக்” கும்பல் மற்றும் யுடிஎஸ்எப் பணியாளர்கள் திடீரென தாக்கினர். காப்பாற்ற முயன்ற சரத், விஷ்ணு ஆகியோரும் தாக்கப்பட்ட னர். கண்ணூர் மாவட்டத்தில் நடந்த கல்லூரி சங்க தேர்தல், கால்நடை, வேளாண் பல்கலை, ஐடிஐ தேர்தல் களில் மற்றும் காலிகட் பல்கலைக்கழ கத்தில் எஸ்.எப்.ஐ., அமோக வெற்றி பெற்றது. இதில், மாவட்டமே அதிர்ந் தது. இதையடுத்து யுடிஎஸ்எப் போதைப்பொருள் குற்றக் கும்பலுடன் இணைந்தது. படுகாயமடைந்த அபர்ணா ஆபத்தான நிலையில் மேபாடி விம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.