சென்னை, மார்ச் 26- ஊதிய உயர்வு- பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தி நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஆஷா ஊழியர் கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். ஆஷா பணியாளர்கள் கர்ப்பிணிகளின் நலன் காக்க பணியில் நியமிக்கப்பட் டுள்ளனர். கிராம சுகாதார ஊழியர்களுக்கு இணையான பணிகளை செய்து வருகிறார் கள். ஆனால் அவர்களுக்கு சம்பளம் என்று ஒன்றும் இல்லை, ஊக்கத்தொகை மட்டுமே உள்ளது. அதுவும் குறைந்தளவே உள்ளது. ஆஷா பணியாளர்கள் நிய மிக்கப்பட்டபின் தாய் - சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என அரசு அறிவித்துள்ளது. புதுமண தம்பதியின ருக்கு ஆலோசனை வழங்கு தல், கருத்தரித்தலை உறுதி செய்தல், கர்ப்பிணி பெண்க ளை கர்ப்பகாலத்தில் 5 முறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை மேற்கொள்ள அழைத்துச் செல்லுதல், பிரசவ காலம் வரை கண்கா ணித்து பிரசவத்திற்கு அழைத்துச் செல்லுதல், குழந்தை பிறந்ததுமுதல் 5 வயது வரை வழங்க வேண்டிய சொட்டு மருந்து, தடுப்பூசி, சத்துமாத்திரைகள் வழங்கி நோய் தாக்குதலில் இருந்து தடுக்கும் பணியை செய்து வருகின்றனர்,
10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்க ளுக்கு கல்வி நிலையங்களு க்கு சென்று அவர்களுக்கு சத்துமாத்திரை கொடுத்து வருகின்றனர். அதுமட்டு மின்றி மகப்பேறு உதவித் தொகை பெற அரசுக்கு ஆவன செய்தல், குடும்ப பதிவேடு பராமரித்தல், மேலும், கொ ரோனா காலங்களில் முன் களப்பணியாளர்களாக இருந்து கொரோனா ஒழிப்பு பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். (இவர்களு க்கு வழங்கவேண்டிய கொ ரோனா பணி செய்ததற்கான ஊக்கதொகை முறையாக வழங்குவதும் இல்லை). இவை அனைத்தையும் செய்தாலும் இவர்களை தன்னார்வலர்கள் என வரை யறுத்து ஊக்கத்தொகை ரூ.2000/- முதல் 3000/- வரை மட்டுமே வழங்கப்படு கிறது. அதுவும் சில மாவட்டங்களில் மாதாமாதம் வழங்காமல் மூன்று மாதம், நான்கு மாதத்திற்கு ஒரு முறை வழங்குகின்றனர். பிரதிமாதம் வழங்குவதும் இல்லை.
13 ஆண்டுகளாக ஆஷா ஊழியர்களாக பணியாற்றி வரும் ஆஷா ஊழியர்க ளுக்கே ‘மக்களை தேடி மருத் துவம் (MTM)’ பணியை வழங்ககோருகிறோம். அவர் களுக்கான பணி நியம னத்தையும், ஊதியத்தையும் சுகாதாரத் துறையின் மூலம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்ககோருகிறோம். •10 ஆண்டுகாலம் பணி யாற்றிய ஆஷா ஊழியர்க ளை கிராம சுகாதார செவிலி யர் (VHN) ஆக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். •குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000/- வழங்கிட வேண்டும், •பிரதிமாதத்திற்குள் மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும். •மக்களை தேடி மருத்து வம் திட்டத்தில் ஆஷா ஊழி யர்களை இணைத்திட வேண்டும், •பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், •சுகாதாரத் துறையால் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், •வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ-ல் ஆஷா தொழி லாளர்களை இணைத்திட வேண்டும், •பணிக்கொடை, இறப்பு நிவாரணத் தொகை ரூ.5 லட் சத்தை வழங்கிடவேண்டும், இந்த கோரிக்கைகள் வெற்றியடைய மார்ச் 28-29 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆஷா ஊழியர்கள் பெருந் திரளாய் பங்கேற்றிட வேண்டு மென ஆஷா ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.