குட்டி... என்னடா.. ஏதோ வரைஞ்சுக்கிட்டு இருக்க போல
ருக்கே.
ஆமாம் பா... யானை..
சூப்பரா இருக்குமா. சரி.. சரி.. அப்பா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சுருக்கேன்..
அப்படியா..?
“டொன்ட டொய்ங்” என்றவாறே வெளியில் எடுத்தார். குளிருக்கு போர்த்திக் கொள்ள ஒரு சால்வை. சில பேனாக்கள்.
அய்... சூப்பரா இருக்குப்பா..
உனக்குதான் எல்லாமே..
சரிப்பா..
அப்பாவின் செல்போன் அப்போது ஒலித்தது.
எடுத்துப் பேசியவர், அப்ப
டியே எல்லாவற்றையும் விட்டு
விட்டு கிளம்பச் சொன்னார். சமைய
லறையில் வேலைகளை நிறுத்தி
விட்டு அம்மாவும் எங்களையும் கிளப்பிவிட்டு, அவரும் தயாரானார். அவரோட ஃப்ரெண்டு தவறிட்டாராம்.
பஸ்ஸில் போய்க் கொண்டு இருக்கும்போது, அந்த ஃப்ரெண்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமாப்பா..
ஆமாம் மா..
அவர மாதிரி இன்னோரு உயிரப்
படைக்க முடியாதாப்பா..
உயிர எல்லாம் நம்மால எப்புடி படைக்க முடியும்..?
அவள் எதுவும் பேசவில்லை. நான்கு நாட்கள் கழித்துதான் ஊரிலி
ருந்து திரும்பினர்.
நேராக சமையலறைக்குச் சென்ற
வள், வேகமாக அப்பாவிடம் திரும்பி
னாள்.
அப்பா... உயிரப் படைக்குறது என்ன.. நம்மால சமைக்கவே முடி
யும்..
என்ன குட்டி சொல்ற?
இங்க பாருங்க... டொன்ட டொய்ங்..
நான்கு நாட்களுக்கு முன்பாக அப்படியே விட்டுவிட்டுப் போன சோறு
கெட்டுப் போனதால் “உயிர்கள் தோன்றி”யிருந்தன.
குக்கருக்குள் எத வெச்சா, அப்பா
வோட ஃபிரண்டு வருவாரு... என்று அம்மாவிடம் கேட்க ஆரம்பித்தாள் மகள்.