tamilnadu

img

2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சேதமுற்று, புதர்மண்டிக் கிடக்கும் தொடையூர் தொல்லியல் சின்னங்கள்

புதுக்கோட்டை, அக்.19 -  2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தொடையூர் கிராமத்தி லுள்ள தொல்லியல் சின்னங்களை சேத முறாமல் பாதுகாக்க தொல்லியல் துறை  முன்வர வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையில் இருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது தொடையூர் கிராமம். பெருங்கற்காலத்தைச் சேர்ந்த  மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் எனக் கருதும் அளவுக்கு ஏராளமான தொல்லியல் சின்னங்கள் இங்கு உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பெரும் சிதைவுக்குள்ளாகியும், கருவை  புதர்கள் மண்டியும் காணப்படுகின்றன. இவற்றில் தமிழகத் தொல்லியல் துறை  சிறப்புக் கவனம் செலுத்தி, பாதுகாக்க வும், ஆய்வு செய்து ஆவணப்படுத்த வும் வேண்டும் என்று  மன்னர் கல்லூரி யின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரிய ரும் தொல்லியல் ஆர்வலருமான ராமன் கருப்பையா வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், “தொடையூர் கிராமத்தின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 2 ஏக்கர்  பரப்பளவில் கல்வட்டம், கல்திட்டை மற்றும் முதுமக்கள் தாழிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. இவற்றில் பெரும் பாலானவை சேதப்படுத்தப்பட்டி ருக்கின்றன. கருவை புதர் மண்டிக் கிடக்கின்றன. பெரிய அளவிலான கற்பலகைகள்  அவற்றின் மீது போடப்பட்டிருக் கின்றன. வட்டமான குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. அவை முற்றிலும் சரிந்து காணப்படுகின்றன. இவற்றைத் தாண்டி  நிறைய குன்றுகள் உள்ளன. அவற்றில் இரு குன்றுகளில் பெரிய கல் செக்கு கள் காணப்படுகின்றன. ஒன்றில் கல்வெட்டும் உள்ளது. இங்கிருந்து எண்ணெய் ஆட்டப்பட்டு, வணிகப் பயன் பாட்டுக்காக நார்த்தாமலை எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. மனித வாழ்விடமாக  கருதப்படும் பகுதி  இங்குள்ள தொடக்குளம் என்ற குளத்துக்குள், தளவாய் கருப்பர் என்ற சிலையை இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். போரில் இறந்த தள வாயாக அவர் இருக்கலாம். மேலும்,  இங்குள்ள சிவன்கோவிலில் மூலவர்  தொடராண்டார் என்றழைக்கப்படு கிறார். இக்கோவில் வளாகத்தில் 4 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுடன், தொடையூரைச் சுற்றி லும் வயல், வரப்பு, திடல் என எல்லாப் பக்கமும், ஏராளமான கருப்பு-சிவப்பு மட்கலப் பானை ஓடுகள் விரவிக் கிடக் கின்றன. பெரிய அளவிலான கோவில்  காடுகள் இங்குள்ளன. சுமார் 2,500  ஆண்டுகள் பழமையான மனிதவாழ்வி டம் இருந்திருக்கலாம் எனக் கருதப் படும் அளவுக்கு உள்ள இந்தப் பகுதியை, தமிழகத் தொல்லியல் துறை யினர் மேலும், சேதமுறாமல் பாதுகாப்ப துடன், முழுமையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும்” என்று வலி யுறுத்தியுள்ளார்.